கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகளுடன் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு
கோயம்புத்தூர், நவ.3 - மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரி களுடன் அனைத்து ஜமாத் நிர்வாகி கள் கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது. இச்சம்பவம் மதவெறிக்கு இங்கு இடமில்லை என்பதை பறை சாற்றியது. கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. கார் வெடித்ததில் ஒருவர் உயிரி ழந்து விட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கார் வெடிப்பு சம்பவத்தை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பாஜகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாகவே பாஜக வினர் பந்த் அறிவிப்பு செய்தனர். பொதுமக்கள் ஆதரவு இல்லாத நிலையில் அதனை திரும்பப் பெற்ற னர். பின்னர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்து கந்த சஷ்டி கவசம் பாடி கேலிக்குள்ளா னார். இதேபோன்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் இந்து த்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏதோ ஒருவகையில் இச்சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே மக்களி டம் பதற்ற நிலையில் இருக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற னர். ஆனாலும், மதவெறியர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை உறுதிப் படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன்ஒருபகுதியாக, இரு மதத்தினரிடையே சகோதரத்து வத்தை பாராட்டும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் வியாழனன்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அர்ச்சகர்கள் கைகூப்பி உள்ளே வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவில் பிரகாரத்தில் உள்ள அறையில் அமர்ந்த அவர்கள் அதே பகுதியில் பல தலை முறைகளாக வசித்து வரும் தங்க ளது நினைவுகளை பகிர்ந்து கொண்டும், உங்களுடன் நாங்கள் இருக்கிறோம், உங்களோடு நாங்களும், எங்களோடு நீங்களும் உள்ளீர்கள். இந்த ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என வாஞ்சையோடு அளவளாவினர். பின்பு கோவில் அர்ச்சகர்கள் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பட்டுத் துண்டு அணிவித்து மரியாதை செய்த னர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று கட்டி யணைத்தும், தோல் மேல் கை போட்டு நெகிழ்ச்சியோடு சகோத ரத்துவம் பாராட்டிக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தி யாளர்களை சந்தித்து அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுச் செய லாளர் இணையத்துல்லா பேசுகையில், மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தும் வகையில் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோயில் நிர்வாகி களை சந்தித்தோம். ஏழு தலை முறைகளாக இந்த கோட்டைமேட் டில் வசித்து வருகிறோம். இந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலை அண் ணன், தம்பிகளாக அனைத்து மதத்தினரும் பார்த்து வருகிறோம். கார் வெடிப்பு சம்பவத்தை எங்கள் அமைப்புகள் கண்டிக்கிறது. சிறுபா ன்மை மக்களோடு பெருபான்மை மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம். உங்களோடு நாங்கள், எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களை முன்னெடுக்க உள்ளோம். எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்கமாட்டோம். சிறுவயதி லிருந்து அனைவரும் ஒன்றாக இருந்தது குறித்து எல்லாம் பேசினோம். தேர்த் திருவிழாவின் போது ஒத்துழைப்பு கொடுத்தது எல்லாம் பேசினோம். இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். ஆன்மீகத்தையே பின்பற்றும் எங்களை அமைதியாக வாழ விடுங்கள் என்றார்.
கோவைக்கு தரும் செய்தி இதுதான்
கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகளுடன் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்ட இச்சம்பவம் சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து எழுத்தா ளர், சமூக செயற்பட்டாளர் ஒடியன் லட்சுமணன் தனது முகநூல் பதிவில், “கலவரங்களின் போதெல்லாம் அந்தப்பகுதியிலிருந்த இந்துமக்க ளை பாதுகாத்தவர்கள் இஸ்லாமிய மக்கள். இந்தகோவிலின் மீது ஒரு கல்கூட விழாமல் காவலிருந்து தடுத்தவர்கள் இஸ்லாமிய மக்கள். இன்று கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் நிர்வாகிகளை சந்திக்க வந்த ஜமாத் அமைப்பினருக்கு கோவில் நிர்வாகம் அங்கவஸ்திரம் அணிவித்து மரியாதை செய்திருக் கிறார்கள். ஓராணியில் நிற்போம். அமைதியை சமைப்போம் கோட்டை கோவைக்கு தரும் செய்தி இதுதான்” என பதிவிட்டுள்ளார்.