tamilnadu

img

மகப்பேறு மருத்துவமனைகளில் ரத்த வங்கியை ஏற்படுத்துக!

சென்னை, ஏப். 8- அனைத்து மகப்பேறு மருத்துவ மனைகளிலும் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது, இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக சுகாதார தினத்தை (ஏப். 7) முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்கள், தலைமை அரசு மருத்துவமனை, மகப் பேறு மருத்துவமனை ஆகியவற்றில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 30க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 50,000 முதல்  ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினசரி 200  முதல்  600 பேர் வரை சிகிச்சைக்கு வரு கிறார்கள். இந்த மையங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தால் எப்படி 600 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க இயலும். 2  மையங்களில் நிரந்தர மருத்துவர்கள் இல்லை. ஒவ்வொரு நாளும் வேறு வேறு மருத்துவர்கள் வரு கிறார்கள்.

அனைத்து மையங்களிலும் செவி லியர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவே உள்ளனர். மருத்துவர், செவிலியர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை அனைத்து மையங்களிலும் உள்ளது. பல மருத்துவமனைகள் மாலை 4 மணி  வரை செயல்படுகின்றன. மதுரவாயல், காட்டூர், ஊத்துக்கோட்டை ஆகிய 3 மைய ங்கள் 12.30 மணிக்கு மூடப்படுகின்றன.

காலியிடங்கள்

8 ஆரம்ப சுகாதார மையங்களிலும், 4ஆவது மண்டலத்திலும் சுகாதார ஆய்வாளர்கள் இல்லை. இதில் 20 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். 50 விழுக்காடு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். 30 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே உடனடியாக ஒப்பந்த நிரந்தரம் செய்யவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சுகாதார மையங்கள் காலை முதல் மாலை வரை இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தினசரி 500 முதல் 1000 நோயாளிகள் வரு கின்றனர். இங்கு போதுமான மருத்து வர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை. பரிசோதனைக் கருவிகள் இருந்தாலும் அதற்கான நிரந்தர ஊழி யர்கள் இல்லை. வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வருகிறார்கள். சில அரசு மருத்துவமனைகளில் இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைக் கருவிகள் இல்லை. திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதய நோய், கிட்னி உள்ளிட்ட முக்கியமான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்வதற்கான வசதி இல்லை.

எனவே அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு வர வேண்டி யுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமித்து, அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆம்புலன்ஸ் வசதி இருந்தாலும், தேவைக்கேற்ற ஆம்புலன்சுகள் இல்லை. எனவே கூடுதலாக அன்பு லன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். சென்னையில் மகப்பேறு மருத்துவ மனை ஓரளவு நன்றாகவே உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ் நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் நன்றாகவே உள்ளன என்றாலும், இது போதுமானதாக இல்லை. கொரோனா தொற்றுக்கு பிறகு பல்வேறு நோய்கள் வரத் தொடங்கியுள்ளன. கொரோனா விற்கு பிறகு இருதய நோயாளிகள் அதி கரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

கூடுதல்  நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு

அதேபோல் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட இந்த ஆண்டு பட்ஜெட் டில் கூடுதலாக 928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அம்சம் என்றாலும், 2021 - 2022 பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட குறை வானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். கேன்சர், மன நலம் மருத்துவ மனைகள் சென்னையை மையப் படுத்தியே உள்ளன. மாநிலம் முழுவதி லும் இருந்து இந்த சிகிச்சை பெறுவ தற்கு சென்னைக்கு வர வேண்டியுள்ளது. எனவே இதுபோன்ற சிறப்பு மருத்துவ மனைகளை முக்கியமான நகரங்களில் ஏற்படுத்த வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனை கட்டி டங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி புனரமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் செயல்படா மல் உள்ள எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட பழுதடைந்த பரிசோதனைக் கருவிகளை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் இளை ஞர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான ஆண்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களை மீட்டெடுக்க போதை மறுவாழ்வு மையங்க ளை அரசு உருவாக்க வேண்டும். மேலும் மதுபானக் கடைகளை அரசு படிப்படி யாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது மாநிலக் குழு உறுப்பினர் மஞ்சுளா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பாக்கியம், சித்ர கலா, சாந்தி, பூங்குழலி, பா.தேவி திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மோகனா, பத்மா, சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.