ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மார்ச் 28 அன்று தொடங்கியது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனும், சென்னை கிண்டியில் சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனும், சென்னை அண்ணாசாலையில் தொமுச பொருளாளர் கி.நடராசனும் தலைமை தாங்கி மறியல் போராட்டத்தை நடத்தினர்.