tamilnadu

img

பாட்டாளி வர்க்கம் என்றால் ஒற்றுமை என்று பொருள்

மருத்துவ வல்லுனரும் மனித உரிமைப் போராளியும், கியூபப் புரட்சிநாயகன் சேகுவேரா வின் மகளுமான டாக்டர் அலெய்டா, பெங்களூரில் நடைபெற்ற சி.ஐ.டி.யுவின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.  பிரதிநிதிகளின் உற்சாக கரவொலிக்கிடையே அவர் ஆற்றிய உரையில், ‘நிறம், பண்பாடு, சித்தா ந்தம் கடந்து சகமனிதர்களைச் சென்ற டையும் தரத்தை நாம் பெற்றிருப்பது மிக அவசியம்’ எனக் குறிப்பிட்டார். பெங்களூரு அரண்மனை மைதா னத்தில் நடைபெற்ற சிஐடியு 17வது  அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் அலெய்டா குவேரா,  ‘‘பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய பலத்தை எல் லாம் திரட்டி தற்போதைய நிலையை மாற்ற வேண்டும்’’ எனக்குறிப்பிட்டார்.

மாநாட்டின் பிரதிகளைப் பார்த்து, பாட்டாளி வர்க்கம் என்பதன் வார்த்தை  வரிசை என்னவென்று கேள்வி எழுப்பி, ‘ஒற்றுமை’ என விளக்கினார். ‘‘ஒற்றுமையை அடைவதற்கு பரஸ்பரம் மரியாதை மிக அவசிய மானது. பல்வேறு சித்தாந்தங்கள் இருக்கலாம். பல வகைகளில் ஒரு குறிக்கோளை நாம் அடையலாம். ஆனால், நம்மிடையே உள்ள வேற்றுமைகளை நாம் மதிக்க கற்றிட வேண்டும். இந்த வேறுபாடுகளில் இருந்து நம்முடைய இருத்தல் நிலை யை மாற்றுவதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ எனக்குறிப்பிட் டார். மிகப்பெரிய ஒரு வல்லரசுக்கு மிக அருகில் இருந்துகொண்டு கியூபா வால் தனித்து சமாளிக்க முடிகிற தென்றால், அது மக்கள் ஒற்றுமை யால்தான் சாத்தியமானது என்றார். ‘‘பிற மனிதர்களை நெருங்கக்கூடிய மனிதப் பண்பை நாம் பெற்றிருத்தல் அவசியம். எல்லா மனிதர்களும் சமம்.  நிறம், பண்பாடு, சித்தாந்தம் எதுவும்  பொருட்டல்ல. நாம் பிற மனிதர் களுக்கு பயனுள்ளவர்களாக இருக் கிறோமா என்பதே பொருட்டு. இந்தப் பண்பு மட்டுமே நம்மை மனிதர்களாக வளரச் செய்கிறது’’ என்றார் அவர்.  

‘‘மனிதர்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு, பிரச்சனை களுக்குத் தீர்வுகாண்பது அவசியம்’’ எனவும் குறிப்பிட்டார். கியூபாவின் தற்போதைய பொருளாதார நிலையைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இரண்டாண்டு காலமாக மோசமான  பெருந்தொற்றினால் கியூபா பொரு ளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்கள் நலனுக்காக அரசாங்கம்  தன்னிடம் இருந்த எல்லா வளங்களை யும் செலவழித்துவிட்டது. கியூபா விற்கு எதிரான பொருளாதாரத் தடை களை அமெரிக்கா மிகக்கடுமையாக்கி இருக்கிறது. மக்கள் மத்தியில் மிகக்  கடுமையான பாதிப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நாங்கள்  கடுமையாக உழைத்திட வேண்டி யிருக்கிறது. 

எங்களுடைய ஒட்டுமொத்த மக்கள்தொகைக்காகவும் நாங்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டி யிருக்கிறது. தொடர்ந்து அமெரிக்கா வை எதிர்ப்பதற்கு உலகம் முழுவதி லும் இருந்து எங்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும், சக்தி களையும், வலுவையும் நாம் ஒருங்கி ணைக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, “மக்கள் ஒன்றுபடுவதைக் கண்டு அநீதி நடுநடுங்கும்”  என  பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய டாக்டர் அலெய்டா, வெற்றிகிட்டும் வரை முன்னேறுவோம் எனக் குறிப்பிட்டார்.