ஜம்முவில் கலக்கத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
திங்களன்று மதியம் 12 மணியள வில் தில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. இது இடைநில்லா விமானம் அல்ல. அதாவது தில்லியில் இருந்து கிளம்பி ஜம்முவில் இறங்கும். பின்னர் மீண்டும் ஸ்ரீநகருக்குச் செல்லும். இந்நிலையில், திங்களன்று மதியம் தில்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜம்மு விமான நிலையம் அருகே சென்றது. ஆனால் ஜம்மு விமான நிலையத்தை வட்டமடித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மீண்டும் தில்லிக்கே திரும்பி யது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவ னம் விளக்கம் அளிக்கவில்லை. அதே போல விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்த விவரங்களும் வெளியாக வில்லை. ஜம்முவில் பதற்றம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வானத்தில் நீண்ட வட்டமடித்த போது, ஜம்மு நகரவாசிகள் அகமதாபாத் சம்ப வம் போல நிகழ்ந்து விடுமோ என அச்ச மடைந்துள்ளனர். மேலும் சாலை அருகே மக்கள் கூட்டம், கூட்டமாக விமானம் வட்ட மடித்ததை நீண்ட நேரம் பதற்றத்துடன் பார்த்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் வானிலை சிக்கல், தொழில்நுட்ப பிரச்சனை அல்லது பாதுகாப்பு காரண மாக விமானம் மீண்டும் தில்லிக்கு திரும்பி இருக்கலாம் என ஏர் இந்தியா மூலம் செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் வெயில் கொளுத்தி வருகிறது. அத னால் வானிலை சிக்கலுக்கு வாய்ப் பில்லை. தொழில்நுட்பப் பிரச்சனையாக இருக்கலாம்.