சென்னை,ஜன.6- தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்கள். எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துங்கள் என்று அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம், “கொரோனா பரவல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப் படுத்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப் பிரமணியன்,“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களுக்கு ஐசிஎம்ஆர் வழிக்காட்டுதல்படிதான் சான்று வழங்கப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்காக 49,984 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 29,122 நபர்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. முன்களப்பணியாளர்களின் 375 பேர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.மவுனமான அதிமுக
அம்மா கிளினிக் மூடல் குறித்த எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதில் அளித்தார். அப்போது, சென்னை சைதாப் பேட்டை மயானத்திலும், விருகம்பாக்கத் தில் கரும காரியம் செய்யவும் அறையிலும், மற்றொரு பகுதியில் கழிப்பறையி லும் அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ள தையும், அம்மா கிளினிக் திட்டம் தற்காலி மானது என்று அதிமுக வெளியிட்ட அசார ணையையும் சுட்டிக் காட்டினார். அப்போது எதிர்கட்சித் தலைவர் குறுக்கிட்டபோது, அம்மா கிளினிக் திறக்கப்பட்ட இடங்களை பார்வையிட அதிமுக எம்எல்ஏக்களையும் பத்திரிகையாளர்களையும் அழைத்து செல்ல தயார் என்று அமைச்சர் கூறிய வுடன் அதிமுகவினர் மவுனமாகிவிட்டனர். தொடர்ந்த பேசிய வைத்தியலிங்கம், “ நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளீர்கள். நீட் தேர்வு ரத்துக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும். தில்லி சென்று போராடினா லும் நாங்களும் உங்களோடு நிற்போம். ஆதரவு கொடுப்போம் என்றும் கூறினார்.