சென்னை, ஏப்.13- தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதி ராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து புதனன்று (ஏப்.12) சைதாப்பேட்டையில் கண்ட னப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்தக் கூட்டத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையேற்றார். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் அடிபணிந்திருந் தாலும், அவர் பதவியில் நீடிக்க தகுதி யற்றவர். அவர் வேதாந்தா நிறு வனத்தின் குரலாக பேசுகின்றார். மாநில உரிமையை நிலைநாட்ட ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முன்பாக அதிமுக வெளிநடப்பு செய்கிறது. தமிழ கத்திற்கு ஆளுநர் துரோகம் செய்கிறார். அதற்கு அதிமுக துணை போகிறது’’ என்றார். ‘‘ஆளுநருக்கு ஒன்றிய அரசு அறி வுரை வழங்க மறுக்கிறது. ஆளுநரை வைத்து தமிழகத்தில் அரசியல் நாட கத்தை அரங்கேற்றும் சதியை செய்கிறது.
தமிழகத்தை போன்றே, தெலுங் கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராசன் 13 மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. உச்சநீதிமன்றத் தில் வழக்கு வரும் நேரத்தில் 3 மசோதாக் களுக்கு ஒப்புதல் தருகிறார். கேரளா வில் ஆளுநர் ஆரிப் முகமதுகான் கொடுக்கும் தொல்லை எல்லை மீறி சென்றது. இடதுசாரிகள் ஒரு லட்சம் பேரை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். அதேபோல் தமிழ்நாட்டை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்’’ என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், கி.வீரமணி (திக), வைகோ (மதிமுக), ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), இ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) உள்ளிட்டோர் பேசினர்.