tamilnadu

img

உச்சக்கட்ட அதிகார மோதலில் அதிமுக

சென்னை, ஜூலை 3-  பாஜக உருவாக்கிக்கொடுத்த இரட்டைத்தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அதிமுக வில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுப்பப்பட்டு, இப்போது கட்சியே இரண்டாக கிடக்கிறது. பொதுச்செய லாளராக ஆகியே தீருவது என்ற  முனைப்பில் இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமியும் இரட்டை தலைமையே வேண்டும். அதற்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வமும் மல்லுக்கட்ட துவங்கியுள்ளனர். மாவட்டங்களில் இருதரப்பும் போஸ்டர் யுத்தங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அக்கட்சியில் வரலாறு காணாத களேரபங்களுடன் பொதுக் குழு நடந்து முடிந்தது. கூட்டம் முடிந்த அன்றே தில்லிக்கு வண்டி யேறி, அதிமுகவை இயக்கிக்கொண்டிருக் கும் மோடி, அமித்ஷாவை சந்தித்து நிலைமைகளை சொல்லி கதறவிட்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதிகாரச்சண்டை யின் உச்சக்கட்டமாக இருதரப்பின் மூத்த நிர்வாகிகளின் பேச்சுக்கள் உள்ளன.

வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப் பாடி பழனிசாமி தேர்வு செய்யப் படுவார்” என்று இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள வான கரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஜூலை 3 அன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.  இதன் பின்னர், நத்தம் விஸ்வ நாதன் செய்தியாளர்களிடம் கூறுகை யில்,   வருகின்ற 11 ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி வெகு  சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும். சட்டவிதிகளுக்குட்பட்டு நடைபெறு கின்ற அந்த பொதுக்குழுவில், கடந்த முறை பொதுக்குழு நிராகரித்த 23 தீர் மானங்களில், ஒருசில தீர்மானங் களைத் தவிர்த்து, மற்ற தீர்மானங்கள் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு விலே நிறைவேற்றப்படும். குறிப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பு உரு வாக்கப்படும். கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் படைத்தது பொதுச் செயலாளர் பதவி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளர் பத விக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அந்த அனைத்து அதிகாரங் களும் அடங்கிய பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை  தேர்ந்தெடுக்கும் தீர்மா னம் நிறைவேற்றப்படும் என்று உறுதி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொதுக்குழு நடக்காது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தி லிங்கம் கூறியிருக்கிறார். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான தகவலை தெரிவித்துக் கொண் டிருக்கிறார். இந்த பொதுக்குழு சட்டப் படி நடைபெறும். சட்டவிதிகளுக்குட் பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்  பாட்டுக்கும் வரும்” என்றுதெரிவித்தார். நத்தம் விஸ்வநாதனின் பேச்சுக்கு ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்புஎழுந்துள்ளது. 

கூட்டம் நடக்காது; செல்லுபடி ஆகாது: வைத்திலிங்கம்

“தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில், அதிமுக பொதுக்குழு கூட்டத் திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல. அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை” என்று ஓபிஎஸ் தரப்பு ஆதர வாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இதுதொடர்பாக வைத்திலிங்கம் அளித்த பேட்டியில் , பொதுக்குழு வைக் கூட்டுவதற்கு அவர்களுக்கு அதி காரமில்லை. கடந்த பொதுக்குழுவில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் கருத்துகளை கவனத்தில் கொள்ளா மல், 23 தீர்மானங்களுக்கு மேல் எந்த  தீர்மானத்தையும் கொண்டுவரக் கூடாது என்ற நீதிபதிகளின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு, அவைத்தலைவர் தேர்வு, பொதுக்குழுக் கூட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற தீர்மானங் கள் செல்லாது. பொதுக்குழுக் கூட்டம் என்ற பெயரில் அவர்கள் பொதுக் கூட்டம் போல் நடத்துவார்கள், நடத்த லாம். ஆனால், அது சட்டப்படி செல்லு படியாகாது என்பதுதான் எங்களு டைய கருத்து. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை. எடப் பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகின்றனர். இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ளதால் அடுத்த  நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் பொருளாளர் மற்றும் அவைத் தலைவருக்குத்தான் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. எனவே பொருளாளரின் ஒப்புதல் இல்லாமல், தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக் குழுக் கூட்டத்தை கூட்ட முடியாது” என்று கூறினார்.