திருப்பத்தூர்,பிப்.12- திருப்பத்தூர் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியு றுத்தி வருகிறது. இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொல்லப் பட்டிருக்கிறார்கள்” என்றார். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. பாஜக அரசை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இதுபோன்ற நாடகத்தை அதிமுக அரங்கேற்றி வருகிறது. பாஜக-வினர் குறுகிய அரசியல் நோக்கத்தோடு மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயங்களை தேடுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.