tamilnadu

img

பாஜக கூட்டணியில் கரைந்தது அதிமுக அமித் ஷா நிபந்தனைக்கு பணிந்த எடப்பாடி!

பாஜக கூட்டணியில் கரைந்தது அதிமுக அமித் ஷா நிபந்தனைக்கு பணிந்த எடப்பாடி!

தமிழக  சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு நடைபெற வுள்ள தேர்தலை அதிமுக -  பாஜக இணைந்து தேசிய ஜன நாயகக் கூட்டணியாக எதிர் கொள்ளும் என்றும், தமிழகத் தில் எடப்பாடி பழனிசாமி தலை மையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இரவு சென்னை வந்த அமித்ஷா, வெள்ளிக்கிழமை ஆடிட்டர் குரு மூர்த்தி இல்லத்தில் சில மணிநேரம் ஆலோ சனை நடத்தினார். பின்னர்  சென்னை கிண்டி யில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, எஸ்.பி.  வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.  இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா “பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநா யகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை  எதிர்கொள்ளும். இதை அறிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு” என்றார். “இந்த கூட்டணி, தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் செயல்படும். 1998  முதல் அதிமுக - பாஜக கூட்டணி இருந்து வரு கிறது. இது ஒரு இயல்பான கூட்டணி” என்றும்  அவர் கூறிக்கொண்டார். “வரப்போகும் தேர்தலில் நாங்கள் இணைந்து தான் (அதாவது அதிமுக- பாஜக) இங்கே ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி  ஆட்சி தான் நடைபெற போகிறது. எடப்பாடி தலை மையில் தான் கூட்டணி இருக்கும். வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களை நாங்கள்  சொல்கிறோம். இப்போது எவ்வித குழப்பத்தை யும் ஏற்படுத்த நாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம்”  என்றார். ‘எந்த நிபந்தனையும் இல்லை’ ‘கூட்டணி தொடர்பாக அதிமுக நிபந்தனை  ஏதும் விதித்துள்ளதா’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை” என்றார். அதாவது முற்றி லும் சரண் அடைந்துவிட்டது என்பதை அவர் சொல்லாமல் சொன்னார்.  அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கு அதிமுக வருவது இருவருக் குமே வெற்றியைத் தரும். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் வெற்றிபெற்ற பிறகு எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பதும் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். நீட்தேர்வு விவகாரம் தொடர் பாக செய்தியாளர்கள் கேள்விக்கு  அவர் நேரடியாக பதில் அளிக்கா மல் திசை திருப்பும் வகையில் பதில் அளித்தார். மக்களின் கவ னத்தை திசை திருப்பவே நீட், தொகுதி மறுரையறை போன்றவற்றை திமுக பயன்படுத்துகிறது. என்று கூறிக் கொண்டார். அதிமுகவும் பாஜகவும் இணைந்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்குவோம் என்றும் அமித் ஷா  கூறினார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக  உள்ளது என்றும் இதில் எந்த மாறுபாடும் குழப்பமும் இருக்காது என்றும் மற்றொரு கேள்விக்கு அமித் ஷா பதில் அளித்தார். முன்னதாக அமித் ஷாவுடன் அதிமுக தலை வர்கள் எடப்பாடி பழனிசாமி. கே.பி.முனுசாமி,  வேலுமணி ஆகியோரும் பாஜக சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட னர். அண்ணாமலை பதவி பறிபோன நிலை யில் அவர் கடுப்புடன் அமர்ந்திருந்தார். பாஜக தலைவர் யார் முன்னதாக பாஜக புதிய தலைவர் பத விக்கு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந் திரன் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தகவலை பாஜக தலைமை  அறிவிக்கும் என்று அமித்ஷா கூறினார். அண்ணாமலையை தேசிய பணிக்கு கட்சி பயன்படுத்திக்கொள்ளும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார். துரோகர் கூட்டணி இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி தமிழர்களுக்கு எதிரான துரோகக் கூட்டணி என்று அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. “அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவரும் பாஜகவிற்கு வலு சேர்ப்ப தன் மூலம், மாபெரும் துரோகத்தையே எடப்பாடி  பழனிசாமி இழைத்திருக்கிறார். இதனால், அதி முகவின் தொண்டர்களுக்கு வேதனைதான் மிச்சம். ஏற்கனவே, மக்களால் நிராகரிக்கப் பட்ட இவர்கள், மீண்டும் மக்களால் நிராகரிக்கப் படுவது நிச்சயம்” என்று சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனும் விமர்சித்துள்ளார்.