tamilnadu

img

போயஸ் தோட்டம் விவகாரம்: அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை,ஜன.5- போயஸ் தோட்ட இல்லத்தை தீபா வுக்கு கொடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட அதிமுக மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றததில் ஜெய லலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி என்.சேஷசாயி, ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே  சென்னை மெரினா கடற்கரையில் நினை விடம் உள்ளது. அதற்காக அரசு பெரும் தொகை செலவு செய்துள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு மக்கள் வரிப்பணத்தில் பெரும் தொகையை  செலவு செய்து மற்றொரு நினைவு இல்லம் அமைக்க வேண்டிய அவசியம்  இல்லை. எனவே அரசின் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்கி றேன் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து  செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த  வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபா த்யாய், சக்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் விசாரித்தனர். புதனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அதிமுக மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அரசியல் நோக்கத்துக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது என்றே   தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.