சென்னை, ஆக.22- கேரளா அரசை போல வீடற்ற அனைவருக்கும் ரூ.10 லட்சத்தில் வீடு கட்டித் தர வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியை மற்ற பணிகளுக்கு மடைமாற் றம் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒன்றிய பாஜக அரசு பொறுப் பேற்ற போது வீடற்ற அனைவருக்கும் வீடு கட்டித் தருவோம் என்ற வாக்கு றுதி அளித்தது.ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதிப் படி வீடு கட்டித் தராமல் லட்சக்கணக் கான மக்கள் வீடு இன்றி பாதுகாப்பற்ற இடங்களிலும் வாடகை வீடுகளிலும் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தில் வீடு கட்டும் சிறப்புத் திட்டத்தை மாநில அரசு உடன் துவங்கி மிகுதியான அளவில் வீடற்ற பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிட வேண்டும். ஆகவே ஒன்றிய அரசும்- மாநில அரசும் தலா ரூ. 5 லட்சம் சேர்த்து,வீடு கட்டும் பயனாளி களுக்கு ரூ.10 லட்சத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு கடுமையாக வெட்டி சுருக்கி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 40 நாள் 50 நாட்கள் மட்டுமே இதன் மூலம் வேலை கிடைத்து வருகிறது. 294 தினக்கூலியும் எந்த ஊராட்சி யிலும் முழுமையாக வழங்கப்பட வில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊரக வேலை திட்ட நிதி பல்லாயிரம் கோடி யை அரசின் கட்டிட கட்டுமானப் பணி களுக்கு மடைமாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டது.இதன் மூலம் ஒப்பந்ததாரர்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் கொள்ளையடித்தனர்.ஆனால் தற்பொழுதும் இந்த நிலை தொடர்கிறது. ஊரக வேலைத்திட்ட நிதியை அரசு சார்ந்த அனைத்து கட்டு மான பணிகளுக்கும் கிராமப்புறங்க ளில் பயன்படுத்துவது, கிராமப்புற மக்களுக்கு கூலியாக கிடைக்க வேண் டிய பெரும் தொகையை தட்டிப்பறிப்ப தாகும்.ஆகவே மாநில அரசு ஒன்றிய அரசின் தவறான வழிகாட்டு தல்களைப் புறந்தள்ளி,திட்டத்தின் பயனாளிகளான 93 லட்சம் பேருக்கும் முழுமையாக வேலை கூலி கிடைக் கின்ற வகையில் திட்டத்தை செயல் படுத்திட வேண்டும். விண்ணப்பித்துள்ள அனை வருக்கும் வேலை அட்டையை தாம தம் செய்யாமல் வழங்கிட வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து கடந்த சில மாதங்களாக ஊதி யம் நிலுவையில் இருப்பவர்களுக்கு உடனடியாக ஊதிய பாக்கிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர் மதுரை மாவட்டம் திருமங்க லம் ஒன்றியத்திலும் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திலும், மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றி யத்திலும் நடைபெற்ற போராட்டங்க ளில் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போராட்ட முடிவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.