திருவாரூர், ஜூன் 20 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் திருவா ரூரில் திங்கள்கிழமை சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.லாசர் தலைமையில் நடை பெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, அ.பழநிசாமி, கே.பக்கிரிசாமி, ஜி.ஸ்டாலின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஏ.லாசர் தெரிவித்ததாவது: கடந்த அதிமுக ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைத்ததோடு, பெருமளவு முறைகேடும் நடந்தது. அதே நிலை தற்போ தைய ஆட்சியிலும் தொடர்கிறது. இது கிராமப்புற மக்களின் வாழ்வை பாதிக்கிறது. எனவே அவசரமாக, அவசியமாக முதல மைச்சர் தலையிட்டு திட்ட விதிகளின்படி அனைவருக்கும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தது போல, வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது ஒன்றிய அரசு வழங்கி வருகிற தினக்கூலி ரூ.281 உடன் மாநில அரசு பங்களிப்பாக ரூ.100-ஐ சேர்த்து பயனாளிக ளுக்கு கூலியாக ரூ.381 வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் அணுகுமுறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள கிராமப்புற வேலையின்மை, விலைவாசி உயர்வு கிராம மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்திட வேண்டும்.
புதுதில்லியில் நடைபெறும் நதிநீர் மேலாண்மை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்கிற, ஒன்றிய அரசின் முடிவை வி.தொ.ச மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதோடு அம் முடிவை கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறது. கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மாநில அரசின் முடிவை வி.தொ.ச வரவேற்கிறது. அதேநேரத்தில் கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு பேருத வியாக இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்ப தால், கிராமப்புற ஏழை குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
60 வயது நிரம்பிய முதியோர் அனைவ ருக்கும் பாரபட்சமின்றி மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கிட வேண் டும். ஏழை-எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட சிறப்பு திட்டத்தை மாநில அரசு அறிவித்து செயல்படுத்திட வேண்டும். மாநில அரசு தற்போதுள்ள விலை வாசி உயர்வுக்கு ஏற்ப விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான ஊரக சட்டக் கூலியை குறைந்தபட்சம் ரூ.600 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும். இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்நிலை குறித்து விரிவான ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் அக்னிபாதைத் திட்டத்துக்கு எதி ராக நாடெங்கும் நடைபெறும் போராட்டங்க ளுக்கு வி.தொ.ச ஆதரவு தெரிவிக்கிறது. கிராமப்புற தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு வேலை வாய்ப்பாக இருந்த ராணுவப் பணியை அத்தக்கூலி அடிப்படையில் அளிப்பதை வி.தொ.ச கண்டிக்கிறது. தேச பாதுகாப்பு க்கு ஊறு விளைவித்து ராணுவத்தை கேலிக்கூத்தாக்கி பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 28 அன்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்ப தாகவும், அகில இந்திய அளவில் இடதுசாரி விவசாய அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 1 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.