tamilnadu

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்‌ வியாழனன்று சென்னையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரம் தருகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அளப்பரிய பங்களிப்பை செலுத்தியவர்.‌ இந்திய விவசாய ஆணை யத்தின் தலைவராக அனைத்துத் தரப்பினரின் ஆலோச னைகளை பெற்று பரிந்துரைகளை உருவாக்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நானும் அந்த கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளை அளித்துள்ளேன். விவசாய விளை பொருட்களுக்கு நியாய விலை வழங்குவதில் அவர் கொடுத்த சூத்திரம் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது. இன்றளவும் அதுவே விவசாயிகள் வலியுறுத்திவரும் கோரிக்கையாக உள்ளது. முன்னோடியான அவரின் நடவடிக்கைகள் அனைவருக்குமான, நீடித்த வளர்ச்சியை நோக்கியவை. அவரது குடும்பமும் முற்போக்கான, சமத்துவ சிந்தனை கொண்டதாகும். விஞ்ஞானி எம்‌.எஸ்.சுவாமிநாதனின்  இழப்பால் வாடும் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.