சென்னை, ஏப்.16- மின் இணைப்பால் மாநிலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்து அத னால் தமிழகம் பயனடையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பய னடைந்த விவசாயிகளுடன் நடை பெற்ற கலந்துரையாடல் விழாவில் பேசுகையில் இதனை அவர் தெரி வித்தார். அவர் மேலும் பேசுகையில், லட் சம் புதிய இலவச உழவர் மின் இணைப்பு கள் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங் கத்தில் தொடங்கி வைத்தேன். ஓரா ண்டு காலம் முடிவதற்கு முன்னால் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இணைப்பு என்கிற காரணத்தினால், 1 லட்சம் குடும்பம் அடையும் பயன் மட்டுமல்ல அவர்களது வேளாண் உற் பத்தியால் இந்த மாநிலம் வளர்ச்சி யடையும்.
1990 வரை உழவர்கள், வேளாண் மைக்காக பயன்படுத்தும் மின்சாரத் துக்குக் கட்டணம் செலுத்தி வந்தார் கள். இப்போது இருக்கக்கூடிய புதி யவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருக்கலாம் என்பதால் அதனை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். 2001 முதல் 2006 வரை நடந்த திமுக ஆட்சியில் 1,62,479 வேளாண் மின் இணைப்புகளும், 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் 2,09,910 வேளாண் மின் இணைப்பு களும் வழங்கப்பட்டன. அதிலும், குறிப்பாக 2010-2011 காலகட்டத்தில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 வேளாண் மின் இணைப்புகள் உழ வர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன்பின் நடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதாவது 2011 முதல் 2021 வரை உழவர்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் மின் இணைப்புகள் 2,21,579 மட்டுமே. அதாவது ஆண்டுக்குச் சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப் பட்டன. புதிய இணைப்பு கேட்டு விண் ணப்பித்தவர்களுக்கும் இணைப்பு கள் வழங்கவில்லை. 31.03.2021 நில வரப்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 4,52,777 வேளாண் விண் ணப்பங்கள் பதிவுசெய்து நிலுவை யில் இருந்தன. கொரோனா பெருந்தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை, இப்ப டிப்பட்ட இடர்பாடுகளுக்கு இடை யிலும் வேளாண் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் எவ்வித தொய் வும் இன்றி, செய்து முடிக்கப்பட்டுள் ளது. வெள்ளியன்று ஒரு லட்சமாவது இலவச மின் இணைப்புக்கான உத்த ரவை நான் வழங்குகிறேன்.
இதனையும் சேர்த்து தமிழ்நாட் டில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை 21.80 லட்சத்திலிருந்து 22.80 லட்சமாக உயர்ந்திருக்கிறது. வழங்கப்பட்ட ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்புகளினால் தமிழ்நாட் டின் வேளாண் நிலப்பரப்பு 2,13,107 ஏக்கர் அதிகரித்திருக்கிறது. சுமார் 6,30,340 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு 803 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மானக் கழகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக அரசு எப்பொ ழுதுமே உழவர்களுக்கு முன்னு ரிமை கொடுக்கக்கூடிய அரசு. இனி வரும் காலங்களிலும் சிறப்பான நட வடிக்கைகளை முன்னெடுக்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அமைச் சர் வி.செந்தில் பாலாஜி, துறை செய லர் ராஜேஷ் லக்கானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.