ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் நிகழ்ந் துள்ள ராணுவக் கலகங்களுக்கு ஆப்பிரிக்க யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, அத்த கைய ராணுவத் தலைமையிலான அரசுகளைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஆப்பிரிக்க யூனிய னின் உச்சி மாநாடு தெளிவுபடுத்தியுள்ளது. “ஆப்பி ரிக்கக் கண்டத்தில் எந்தவொரு சமயத்திலும் ஒரே ஆண்டில் நான்கு ராணுவக் கலகங்கள் நடந்ததில்லை” என்று ஆப்பிரிக்க யூனியனின் அமைதி மற்றும் பாது காப்புக் கவுன்சில் தலைவர் பன்கோலே அடியோயி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கள் ராணு வத்தை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் படைகளைக் குவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக அமெரிக்கப் படையினர் வந்திறங்கியுள்ளனர். போலந்து மற்றும் உக்ரைன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஜஸ்லோங்கா விமான நிலையத்தில் இறங்கிய இந்தப் படைகள் எல்லையில் நிறுத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக விதிக்கப் படும் நேரடித் தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷ்யத் துணைத்தூதர் டிமிட்ரி பாலியான்ஸ்கி கூறுகையில், “பாதுகாப்பு கவுன்சில் விதிக்கும் தடை கள் மட்டும்தான் சட்டப்பூர்வமானவையாகும். அத்த கைய தடைகளும் கூட உலகம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவே போடப்படுகின்றன” என்று தெளிவு படுத்தியுள்ளார்.