tamilnadu

img

குவாரி ஏலத்தை நிறுத்த வேண்டும்

மதுரை, அக்.27- விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட த்தில் நடைபெறவுள்ள கிரானைட் குவாரிகள் ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கிரானைட் கனிம  வளச் சுரண்டல், தமிழகத்தில் நடை பெற்றிருக்கும் முறைகேடுகளிலேயே மிகப்பெரியதாகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் மிகப்பெரும் அளவில் கிரானைட் குவாரிகள், சட்டவிரோத சுரண்டலில் ஈடுபட்டன. கிரானைட் கொள்ளையால் அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மட்டுமல்லாது விவசாயம், நீர்நிலைகள், நினைவுச் சின்ன ங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்து டன், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப்புற பொருளாதாரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை 176 கிரானைட் குவாரி களுக்கு குத்தகை அனுமதி அர சாணை பிறப்பிக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் 2002 வரையில் 36 குத்தகை அனுமதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

ரூ.1லட்சம் கோடி இழப்பு  79 சட்டமீறல்கள் 

2003-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 139 குத்தகை அனுமதிகள் வழங்கப் பட்டன. இதனால் அரசுக்கு வந்திருக்க வேண்டிய வணிக வரி, சொத்துவரி, தொழில் வரி, சாலை வரி, கலால் வரி  என்ற வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.  மதுரை மாவட்டத்தில் நடை பெற்றுள்ள சட்டவிரோத கிரானைட் கொள்ளையின்போது கனிமப் பாது காப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, தொல்லி யல், போக்குவரத்து, மின்சாரத் துறை,  பஞ்சமி நிலங்கள், நீர்த் தேக்கங்கள் பாதுகாப்பு, பணப்பரிவர்த்தனை, பாதை மறுப்பு, சாகுபடி நிலங்கள் மற்றும் காவல்துறை தொடர்பான 79 சட்டங்கள், விதிகள் மீறப்பட்டுள்ளன. நில உச்சவரம்புச் சட்டத்தை கறா ராக அமலாக்கி, கிரானைட் நிறு வனங்களின் கைகளில் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து, விவ சாய உற்பத்தியில் ஈடுபடுத்தவும், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், மேலூர் தாலுகா வில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாப் பட்டி, திருச்சுனை உள்ளிட்ட  கிராமங்களில் பல வண்ண குவாரிகள்  அமைக்க தமிழ்நாடு அரசின் கனிம வளத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த குவாரிகள் உரிமம் தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதி ஏல அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனால், பழைய நிலையே மீண்டும்  வருகிறதோ, வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  எனவே, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏல அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.