லக்னோ, ஜன.15- உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 10-இல் துவங்கி மார்ச் 7-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஷாம்லி, மீரட், முசாபர் நகர், பாக்பாத், ஹபூர், கவுதம்புத் நகர், காஜியாபாத், புலந்தசாஹர், மதுரா, ஆக்ரா, அலிகார்க் ஆகிய 11 மாவட்டங்களில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் 58 தொகுதி களுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையன்று துவங்கி யுள்ளது. இந்நிலையில்,”உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி களும் (சோசலிஸ்ட்), அம்பேத்கரி யவாதிகளும் இணைந்து, பாஜக-வுக்கு மாற்றான நல்ல அரசை அமைப்போம்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, பாஜக-விலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா (தொழிலா ளர் நலத்துறை), தரம் சிங் சைனி (உணவுத்துறை), சட்டமன்ற உறுப்பி னர்கள் பகவதி சாஹர், வினய் சாக்யா, ரோஷன் லால் வர்மா, முகேஷ் வர்மா, பிரஜேஷ் குமார் பிரஜாபதி ஆகியோர் அகிலேஷ் முன்னிலையில், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
அப்னாதளம் எம்எல்ஏ சவுத்ரி அமர் சிங், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்எல்ஏ நீரஜ் குஷ்வாலா மவுரியா, பாஜக முன்னாள் எம்எல்சி ஹர்பால் சைனி, பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ பல்ராம் சைனி, பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர பிரதாப் சிங், முன்னாள் அமைச்சர் வித்ரோஹி மவுரியா, முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாதம் சிங், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பான்சி சிங் ஆகி யோரும் சமாஜ்வாதியில் இணைந்த னர். இவர்களை லக்னோவில் நடை பெற்ற விழாவில் சிவப்புத் தலைப் பாகை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், அனைவரும் ஒன்றி ணைந்து, உ.பி. மாநிலத்தில் நல்ல அரசை அமைப்போம் என்று குறிப் பிட்டார். அவர் மேலும் கூறியிருப்ப தாவது: “கடந்த 5 ஆண்டுகளில், விவ சாயிகள் உள்ளிட்ட வெகுஜன மக்க ளுக்கு பாஜக அரசு ஒன்றும் செய்ய வில்லை.
இதனால் மக்கள் மாற் றத்தை எதிர்பார்த்து உள்ளனர். உத்தரப் பிரதேச தேர்தலில் 20 சதவிகித மக்கள் மட்டுமே பாஜக-வை ஆதரிப்பார்கள், மீதமுள்ள 80 சதவிகிதம் பேர் சமாஜ்வாதி கூட்ட ணியையே ஆதரிப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் 80 சத விகித ஆதரவாளர்கள் ஒருபுறமும், 20 சதவிகித ஆதரவாளர்கள் மறு புறமும் இருப்பதாக முதல்வர் ஆதித்யநாத் பேசியிருக்கிறார். ஆனால், சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் முக்கியத் தலைவர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வந்த பிறகு, பாஜக இந்த 20 சதவிகிதத்தை கூட இழக்கும். இதேபோல், 403 தொகுதிகள் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில் நான்கில் மூன்று பங்கு தொகுதி களில் வெற்றி பெறுவோம் என பாஜக கூறிக்கொள்கிறது. ஆனால், வெறும் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதே அதன் அர்த்தம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தோற்று ஆதித்யநாத் முதலமைச்சர் நாற்காலியை இழக்கப்போவதும் நிச்சயம். அதனால் இப்போதே அவர் தனது பழைய வேலைக்குத் (கோரக்பூர் மடாதிபதி) திரும்ப தயாராகி வரு கிறார். நாம் சட்டப்பேரவை தேர்த லுக்காகவே காத்திருந்தோம். தற்போது தேர்தல் நெருங்கி வந்து விட்டது.
சமாஜ்வாதியும் அம் பேத்கர்வாதியும் இணைந்துள் ளோம். இந்த இணைப்பை யாரா லும் தடுக்க முடியாது. உத்தரப்பிர தேசத்தில் பாஜக-வின் விக்கெட்டு கள் ஒவ்வொன்றாக விழுகின்றன. உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கிரிக்கெட் விளையாடவும் தெரி யாதவர். சுவாமி பிரசாத் மவுரியா தன்னு டன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். சமாஜ்வாதிகளும், அம்பேத்க ரியவாதிகளும் ஒன்றாக சேர்ந்து உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ரிய நல்ல அரசை அமைப்போம்.’’ இவ்வாறு அகிலேஷ் பேசியுள் ளார். பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு எதிராக பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே மவுரியா உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளியன்று பாஜக-விலிருந்து விலகி, சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர் என்ற நிலை யில், அதேநாளில் முதல்வர் ஆதித்ய நாத் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரின் வீட்டில் விருந்து சாப்பிட்டு மகர சங்ராந்தி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ஆறுதல்பட்டுக் கொண்டுள்ளார்.