ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவது, அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. மாண்புமிக்க இந்த நிகழ்வை களங்கப் படுத்தும் முறையற்ற சர்ச்சைகளுக்கு காரணமான வர்கள் பெரும்பாலும் ராஜ்பவனில் உள்ள பொறுப்பா ளர்கள் தான். தவறான கூற்றுகள் மற்றும் உண்மைகள் பல பத்திகளில் இருப்பதால் திமுக தலைமையிலான அரசு தயாரித்த உரையை தன்னால் படிக்க இயலவில்லை என தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தால் “ஆளுநர் உரை” அரசிய லமைப்புச் சட்டத்தின் கேலிக்கூத்தாக மாறிவிடும் என்றும் கூறினார். தேசிய கீதம் உரையின் முடிவில் மட்டுமே இசைக்கப்படுகிறது. உரையின் துவக்கத்தில் இசைக்கப் படுவதில்லை என்பதை சட்டக் கேடு என்றும் அரசியல் சட்ட அமைப்பின் பாகுபாடு என்றும் உள்நோக்கோடு அதை ஒப்பிட்டுக் குறிப்பிட்டார்.
ஆளுநருக்கு அழகல்ல!
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தினால் தயாரிக்கப் பட்ட உரையை படிக்க மறுப்பது தான் அதை கேலிக் கூத்தாக மாற்றுகிறது என்பதை நாடாளுமன்ற ஜனநா யகத்தில் ஆளுநரின் பங்கைப் புரிந்து கொள்ளும் எவருக்கும் தெரியும். அரசியல் தளத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளால் அரசாங்கங்கள் நடத்தப்படு கின்றன; உண்மையான அல்லது மிகைப்படுத்தப்பட்ட சாதனைகளை தங்களின் கொள்கை அறிக்கையில் அவர்கள் குறிப்பிட முற்படக் கூடும். ஆனால் அந்த உள்ளடக்கத்தை ஏற்பது , விமர்சிப்பது என்பது அர சியல் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் பணி. கண்டிப்பாக அது ஆளுநர் வேலை அல்ல.
ஓர் எளிய சோதனை!
வழக்கமான உரையை உண்மை மற்றும் தார்மீக அடிப்படையில் படிக்க மறுத்து விட்டதாக கூறும் திரு. ரவியின் கூற்றின் நம்பகத் தன்மையை ஒரு எளிய சோதனை மூலம் கண்டறியலாம். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் குடியரசுத் தலைவரோ ஆளுநரோ இப்படி செய்வார்களா என்ற கேள்வியை எழுப்புவோம்.
ஆளுநரா? அரசியல் முகவரா?
தவறாக வழி நடத்துவது, தவறான விவரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசை விமர்சிக்கவோ அல்லது ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான அறிவிப்புகளோ இருக்கக்கூடாது எனக் கூறுவது அரசியலமைப்பு ரீதியில் ஏற்கத்தக்கது அல்ல. எனினும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையின் தமிழாக்கத்தையும் படித்துவிட்டு, சபாநாயகர் தனக்கு எதிராக கொச்சைப்படுத்தக் கூடாது என்ற அவரது கருத்தில் நியாயம் இருக்கலாம் . ஆனால் அரசிய லமைப்புச் சட்ட அதிகாரிகளின் இத்தகைய நடத்தை பேரவையின் கண்ணியத்தை குறைக்கிறது. மத்தியில் ஆளும் அரசியல் கட்சியின் அரசியல் முகவர்களாக ஆளுநர்கள் செயல்படுவது தான் மிகப்பெரிய பிரச்சனை.
துரதிர்ஷ்ட அம்சம்
நாட்டில் ஆளுநர் பதவியை ஆக்கிரமிக்க அதிகாரப் பசியுடன் ஆலாய் பறக்கும் மேட்டுக்குடி மேதமைகளுக்கு இங்கே ஒருபோதும் குறைவில்லை என்பதுதான் இந்திய அரசியல் அமைப்பின் துரதிர்ஷ்டவசமான அம்சம். ஒருமுறை ஆளுநராக நியமிக்கப்பட்ட உடனேயே அரசியல் களத்திற்குள் நுழைந்ததற்கு சமமான ஆர்வத்தில் திளைக்கின்றனர்.அரசியல் எதிரிகளால் நடத்தப்படும் மாநில அரசாங்கங்களை செயல்பட விடாமல் தடுப்பது, சட்டப்பேரவையின் மாண்புகளை சிறுமைப்படுத்துவது தங்கள் கடமை என அவர்கள் நம்புகிறார்களா என்பது தெரியவில்லை.
எது உண்மையில் கேலிக் கூத்து?
கேள்விக்குரிய சாதனைகளைக் கொண்ட அறிக்கை களை ஆளுநர் படிப்பது அரசியல் கேலிக்கூத்து அல்ல; மாறாக மாநில அரசின் கொள்கைகளோடு ஒத்துப்போகாமல் முரண்படும் ஆளுநர் அந்த பொறுப்பில் நீடிப்பது தான் உண்மையிலேயே அரசியல் கேலிக்கூத்து .
தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் (13.2.2024)
- தமிழில்:கடலூர் சுகுமாரன்