tamilnadu

img

அண்ணாமலை ஒரு பொய்யர்

சென்னை, ஜன. 3 - பிரபல நடிகையும், நடன இயக்கு நருமான காயத்ரி ரகுராம் பாஜகவி லிருந்து விலகுவதாக அறிவித்துள் ளார். தனது இந்த விலகலுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம்; அவரது தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை, மரியாதை இல்லை என்பதுடன், பெண்களுக்கு கொஞ்ச மும் பாதுகாப்பில்லை என்று  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக் களை முன்வைத்துள்ளார். அண்ணா மலை ஒரு பொய்யர் என்றும் கடுமை யாக விமர்சித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமரான பின்னணியில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பாஜகவை நோக்கி  படையெடுத்தனர். அவர்களில் காயத்ரி ரகுராமும் ஒருவர். பாஜக வும் அவருக்கு, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு  மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கியது. ஆனால், அண்ணா மலை தமிழக பாஜக தலைவரான பின்னணியில், காயத்ரி ரகுராமின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. 6 மாதங்களாக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது காயத்ரி ரகுராமிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, காயத்ரி ரகுரா மிற்கு அயலகத் தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும், அண்ணாமலை - காயத்ரி ரகுராம் இடையேயான பிணக்கு முடிவுக்கு வந்ததாக இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைப் பழிவாங்குவதாக காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துப் பதிவிட்டு வந்தார்.

இதனிடையே, பாஜக நிர்வாகி களான திருச்சி சூர்யா - டெய்சி  சரண் ஆகியோர் பேசிக்கொண்ட ஆபாசப் பேச்சு அடங்கிய ஆடியோ  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. அந்த ஆடியோவில் டெய்சி குறித்து மிகவும் தரக்குறைவாக திருச்சி சூர்யா பேசியிருந்தார். கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். அப்போது, ஒரு பெண்ணை இப்படி தரக்குறைவாக பேசிய திருச்சி சூர்யா மீது, பாஜக தலைமை நட வடிக்கை எடுக்க வேண்டும் என  காயத்ரி டுவீட் பதிவிட்டார். ஆனால்,  சூர்யா மீது பாஜக தலைவர் அண்ணா மலை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதனை சுட்டிக்காட்டும் வகை யில், டுவிட்டரில் பதிவிட்ட காயத்ரி  ரகுராம், தமிழக பாஜக அண்ணா மலையிடம் மாட்டிக் கொண்டிருக் கிறது என்ற பொருள்படும் வகையில், ‘குரங்கு கையில் பூ மாலை’ என்று  கடுமையாக சாடினார். இதனால்  ஆத்திரம் அடைந்த  அண்ணாமலை  ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமி னை டுவிட்டரில், இழிவாகவும், ஆபா சமாகவும் பேசி மிரட்டல் விடுத்த நிலையில், “அண்ணாமலை தலை மையில் வார் ரூம் செயல்படுவதாக வும் அதில் இருந்து மிகவும் மோச மான, இழிவான தனிப்பட்ட தாக்கு தல்களை நாங்கள் சந்திக்கிறோம். பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். தமிழக காவல்துறை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுவெளியில் புகார் கிளப்பினார்.

இதையடுத்து ‘கட்சி விவகாரங் களை’ பொதுவெளியில் பேசுவ தாகக் கூறி, காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாதங் களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார். இது காயத்ரி ரகுராமினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தன்னிடம் விளக்கம் கேட் காமலே அண்ணாமலை சஸ்பெண்ட் செய்து விட்டார் என்றும், டெய்சியை ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். “திருடனைப் பாதுகாத்தால் நீயும்  திருடன்தான். ஒரு ஊழல்வாதி யைப் பாதுகாத்தால், நீயும் ஊழல் வாதிதான். கொலைகாரனைப் பாது காத்தால் நீயும் கொலைகாரன்தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவ ரைப் பாதுகாத்தால்..?” என ஒரு கேள்வியை அண்ணாமலைக்கு எதிராக அதிரடி காட்டினார்.

அண்மையில் ‘ரபேல் வாட்ச்’ ஊழல் விவகாரத்தில், பாஜக தலை வர் அண்ணாமலை, எதிர்க்கட்சி களிடம் வசமாக சிக்கினார். அப் போது, “அண்ணாமலை தலைமை யின் கீழ் செயல்படும் பாஜகவில்  அண்ணாமலையுடன் இருக்கும்  யாரும் தர்மத்தை பின்பற்றுவ தில்லை. அண்ணாமலையும் தர்மத்தை பின்பற்றுவதில்லை” என்று காயத்ரி ரகுராமும் குற்றச்சாட்டைக் கிளப்பினார். இதனிடையே, கட்சியிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறி வித்த பின்னரும், அவர் பொறுப்பு வகித்துவந்த ஓபிசி நலப்பிரிவிற்கு புதிய தலைவரை நியமிக்காத அண்ணாமலை, சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டிருந்த காயத்ரி  ரகுராம் பொறுப்பு வகித்து வந்த அயலக தமிழர் நலப்பிரிவுக்கு புதிய தலைவரையும், உறுப்பினர்களை யும் நியமித்தார். இதையடுத்து இனி யும் பாஜக-வில் நீடிப்பது அவமானம் என்று கருதிய காயத்ரி ரகுராம் செவ் வாயன்று அதிகாலை 4 மணிக்கு, பாஜகவிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

“தமிழக பாஜகவிலிருந்து நான்  விலகும் முடிவை கனத்த இதயத்து டன் எடுத்துள்ளேன். இதற்கான காரணம் என்னவெனில், என்னிடம் விசாரணை நடத்த சந்தர்ப்பம் வழங் காதது ஆகும். அதுபோல் சம உரிமை யும் கொடுக்கவில்லை பெண் களுக்கு மரியாதையும் கொடுக்க வில்லை. அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வெளியே இருந்து அவதூறுகளை எதிர்கொள்வதே சிறப்பு என உணர்கிறேன்” என்று தனது பதவி விலகல் பதிவில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். அதில், மோடி, அமித்ஷா ஆகியோரை புகழ்ந்தும் எழுதியுள்ளார். “ஜோக்கரின் (அண்ணாமலை) வார் ரூம் பெங்களூரில் இருந்து இயங்குகிறது. தமிழ்நாடு பாஜக இளைஞரணி, அமெரிக்கா, கோவை  ஆகிய இடங்களிலும் இயங்குகிறது. இவர்கள் எல்லாம் சொந்தக் கட்சி பெண்களை கிண்டல் செய்ய மட்டுமே லாயக்கு. ஜோக்கருக்கு இந்த சீப்பான திரில்லில் ஆர்வம் உள்ளது. நான் உண்மையைச் சொல்வேன். உங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜோக்கரை பாராட்டி பில்ட் அப்  கொடுப்பதற்காக அதிக பணத்தை செலவு செய்கிறார்கள். இந்த வார் ரூம்தான் அவரைக் காக்கிறது. எல்லாம் வேஸ்ட். இந்த ஜோக்கர் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதுதான் இந்த வருடத்தின் ஆகப்பெரிய நகைச்சுவை” என்றும் மற்றொரு பதிவில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.