tamilnadu

img

மைதானத்தில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்: செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

வண்டலூர், அக். 30- செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் மலைப் பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது ராணுவ வீரர்கள் பயன்படுத்திய 3  சக்திவாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் கிடந்ததை அப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் பார்த்தனர். இதுகுறித்து மறைமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணை யர் சிங்காரவேலன் தலைமையில் மறைமலை நகர் காவல் துறை யினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல், செயல் இழத்தல் துறை அதிகாரிகள் நேரில் சென்றனர். ராக்கெட் லாஞ்சர்களை மீட்டு, குழி  தோண்டி சுற்றி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைத்தனர். இதுகுறித்து உதவி ஆணையர் சிங்காரவேலன் கூறுகையில், இதுகுறித்து உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வெடி பொருள் தடய வியல் துறை நிபுணர்கள் மூலமாக பாதுகாப்பாக இந்த ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழக்கச் செய்யப் படும் என்றார்.