மதுரை, ஜூன் 10- மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அடுத்த அய்யங் கோட்டை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் வத் தலக்குண்டுவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளி யன்று காலை சென்னையில் இருந்து மதுரை விமான நிலை யத்திற்கு வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதற்கட்ட மாக மதுரை விமான நிலை யத்தில் ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து திண்டு க்கல் மாவட்டம் செல்லும் வழி யில் வாடிப்பட்டி வட்டம் அய்யங் கோட்டை அரசு சுகாதார நிலை யத்தில் திடீர் ஆய்வு நடத்தி னார். ஆய்வின்போது சுகாதார நிலைய நோயாளிகள் அறை, மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளை சோத னையிட்ட அமைச்சர், அதி காரிகள் வருகை குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருத்துவ மனை மருத்துவ அதிகாரி ரூபேஷ்குமார் 2 மணி நேரம் பணியில் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாக வரு வதாக மருத்துவமனையில் இருந்தவர்கள் கூறினர். இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய விசார ணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட பொது சுகா தாரத்துறை இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.