tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஏற்பு: போராட்டம் ஒத்தி வைப்பு

சென்னை, மார்ச் 1 – காதுகேளாதோர் வாய் பேசாதோர் கோரி க்கைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனா ளிகள் ஆணையர் ஒப்புக் கொண்டதால் புதனன்று (மார்ச் 1) நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு காதுகேளாதோர் வாய் பேசா தோர் உரிமைகளுக்கான மாநில கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்த மார்ச் 1 அன்று எழிலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் பிப்.27 அன்று சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஜான்சி ராணி, மாநில கிளையின் தலைவர் பி. ஜீவா, செயலாளர் எம். சொர்ணவேல், பொரு ளாளர் வி. சுதா உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  

அப்போது, மாவட்ட அளவில் நடை பெறும் முக்கிய அரசு நிகழ்வுகளில் சைகை  மொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்படுத்தப் படும். பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல மைச்சர் உள்ளிட்டோரின் உரைகள் சைகை மொழியில் அறிவிப்பு செய்யப்படும். காவல்துறை உள்ளிட்ட (ஹெல்ப்லைன்) அவசர அழைப்புகளில் காது கேளாதோர், வாய் பேசாதவர்கள் வீடியோ காலில் வந்தால் அவர்களுடைய புகாரை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். தனியார் வேலை வாய்ப்புகளில் செவித்திறன் பாதிக் கப்பட்டோருக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொலைக்காட்சி நிகழ்வுகளை செவித் திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பு செய்ய ஒன்றிய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறைக்கு கடிதம் அனுப்பப்படும். கிராம உதவி யாளர் பணியிடங்கள், ரேஷன் கடை பணி யாளர் தேர்வு போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க, தலைமைச் செயலாளர் வாயிலாக ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று  ஆணையர் உறுதியளித்தார். இதனையடுத்து, மார்ச் 1ம் தேதி நடை பெற இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்தி  வைக்கப்பட்டது.