சென்னை, ஏப். 3 - பாலியல் புகாரில் தலைமறை வாக இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலை யில், கடந்த 10 ஆண்டுகால ஐசிசி அறிக்கைகளை தாக்கல் செய்ய கலாஷேத்ரா நிர்வாகத் திற்கு, மாநில மகளிர் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிஷன், சஞ்ஜித்லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி மார்ச் 30, 31 தேதி களில் மாணவிகள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி நேரடியாக கல்லூ ரிக்கு சென்று விசாரணை நடத்தி னார். மேலும் கலாஷேத்ரா இயக் குநர் நேரில் ஆஜராக உத்தர விட்டார். கைது இந்நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஹரி பத்மன் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 354ஏ, 506, பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டம் 4ன் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறை வான மாதவரத்தில் தங்கியிருந்த ஹரிபத்மனை திங்களன்று (ஏப்.3) காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜ ரான, கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமசந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி ஐசிசி உறுப்பினர் உமா மகேஸ் வரி ஆகியோரிடம், ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி விசாரணை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்க ளிடம் ஏ.எஸ்.குமாரி கூறியதா வது:
கலாஷேத்ராவிற்கு மார்ச் 31 அன்று சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தேன். அப்போது நிறைய பாலியல் புகார்களை தெரிவித்தனர். அன்றைய தினம் இயக்குநர் உள்ளிட்டோர் இல்லாததால், அவர்களை நேரில் அழைத் திருந்தேன். அதன்படி வந்த அவர்களிடம் உள்ளீட்டு புகார் குழு (ஐசிசி) குறித்து பேசினேன். கல்லூரியில் உள்ள ஐசிசி குழுவில், இயக்குநர், வழக்கறி ஞர், 2 ஆசிரியர்கள் என 4 பேர் உள்ளனர். ஐசிசி அறிக்கைகளை எடுத்து வரவில்லை என்றும், தற்போது பாலியல் குற்றம்சாட்டப் பட்டுள்ள 4 பேர் குறித்து மாணவி கள் புகாரே தெரிவிக்கவில்லை என்றும் இயக்குநர் தெரிவித்தார். எனவே, கடந்த 10 ஆண்டுகளாக வந்துள்ள புகார்கள் குறித்த ஐசிசி அறிக்கையை சமர்ப்பிக்க கூறியுள்ளேன். அதேசமயம், இணையம் வாயிலாக நிறைய புகார்கள் வந்துள்ளன. இதுவரை நடந்த விசாரணை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் புகார் தெரிவிக்கலாம். ஏப். 12ந் தேதி வரை மாணவி கள் கல்வி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்க வேண்டி உள்ளது. எனவே, கல்வி வளாகத் தில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும். குற்றச் சாட்டுக்கு உள்ளான நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளார். எஞ்சிய மூவரை கல்வி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. ஐசிசி குழுவில் மாணவர் பிரதிநிதி இல்லாததால், கல்லூரிக்குள் குறைதீர்ப்பு குழு (கிரிவன்ஸ் கமிட்டி) அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். மாணவர்கள் நேரடியாக தேர்வு நடத்த கோரிக்கை வைத் துள்ளனர். அதை குறிப்பிட்டு அறிவுறுத்தியபோது, ஏப்.5 ஆம் தேதியிலிருந்து தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலிக நீக்கம்
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் ஆசிரியர் ஹரிபத்மன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்ற 3 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.