செங்கல்பட்டு மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வர்க்க போராட்டக் களத்தில் செயல்பட்டு வரும் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் கே.மனோகரனுக்கு பதிவுகள் அறக்கட்டளை சார்பில் மாமேதை காரல் மார்க்ஸ் விருதும் ரூ.5 ஆயிரம் பண முடிப்பும் வழங்கப்பட்டது. அந்த தொகையை உழைக்கும் மக்களின் செய்திகளை வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு வளர்ச்சிக்காக சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணாவிடம் வழங்கினார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.செல்வம், வட்டக்குழு உறுப்பினர் கே.லிங்கன் உடனிருந்தனர்.