tamilnadu

img

ஊரக வேலை நாட்களை 150 ஆகவும் சம்பளத்தை ரூ.100 உயர்த்தி வழங்கிடுக!

நாகர்கோவில், மே 21- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட் களை 150 ஆக அதிகரித்து, தற்போது வழங்கப்பட்டுவரும் சம்பளத்தில்  உடனடியாக ரூ.100 உயர்த்தி வழங்க தமி ழக அரசு முன்வர வேண்டும் என விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில  இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் கேட்டுக்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வெள்ளி, சனி (மே 20, 21) ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது.  இதில் பங்கேற்ற ஏ.விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒன்றிய அரசு ‘ஆசாதிகா அமிர்து வர்ஷ்’ என்கிற பெயரில் கொண்டாடுகிறது.  ஆனால், கெடுவாய்ப்பாக நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், மீனவர்  கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு எந்தவித அமிர்தமும் கிடைக்கவில்லை. சில பெரும் பணக்காரர்களுக்கு மட் டுமே பாஜக அரசு அமிர்தமாக இருக்கிறது. பணவீக்கத்தால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழைகள் தவிக்கிறார்கள். பெரும் பணக்  காரர்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1,67,000 கோடி வரிச்சலுகையாக அளித்துள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்  களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கொள்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து  முக்கியத் துறைகளும் தனியார்மயமாக்  கப்படுகிறது. அதிக லாபம் ஈட்டி வரும் எல்ஐசி பங்குகள் குறைந்த விலையில்  விற்பனை செய்யப்படுகிறது. மறுபக் கத்தில் மண்ணெண்ணெய் வாங்க ஏழை களும் மீனவர்களும் அதிக விலை கொடுக்க  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு மக்கள்  அனுபவித்துவரும் துன்ப துயரங்க ளுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை. ஆனால், கேரள அரசு பல்வேறு நிவா ரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழைகளுக்கு வீட்டு வசதி  செய்துதரும் கேரள அரசு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்  கான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநில அரசால் செய்ய முடிந்த வற்றை ஒன்றிய அரசால் செய்ய முடிய வில்லை. மாறாக பாஜக ஆளும் மாநி லங்களில் சாதி, மதங்களின் பெயரில்  பாரபட்சம் காட்டப்படுகிறது. தலித்து களுக்கு எதிராக தாக்குதல்கள் நடை பெறுகின்றன. ஒன்றிய அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடு  தழுவிய இயக்கத்துக்கு திட்டமிடப் பட்டுள்ளது. 

ஆகஸ்ட் முதல் தேதியில் நாடு முழு வதும் மாவட்டங்களிலும் முக்கிய நக ரங்களிலும் 500 மையங்களில் போராட் டம் நடத்தப்படும். ஒன்றிய அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்  டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமல்  படுத்துவதிலிருந்து ஒன்றிய அரசு பின் வாங்க வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.