tamilnadu

img

வயதை அதிகரித்து ஓய்வூதியத்தை பறிக்கும் அரசுகள் !

சென்னை, பிப். 28- ஓய்வுபெறும் வயதை அதிகரித்து ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையில் அரசுகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே பென்ஷனர்ஸ் மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டினார்.  தட்சிண ரயில்வே பென் ஷனர்ஸ் யூனியன் துவக்க  மாநாடு சென்னை சேப்பாக் கத்தில் செவ்வாயன்று (பிப். 28) நடைபெற்றது. ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். சாம்ப சிவம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். என்.அபிமன்யூ வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன் மாநாட்டை  துவக்கி வைத்து பேசுகை யில், ஒன்றிய பாஜக அரசு மாண வர்கள், இளைஞர்கள், விவசா யிகள், தொழிலாளர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. நாடு  உலக வங்கியிடம் சிக்கி யிருப்பதே அதற்கு காரணம். நவீன தாராளமயக் கொள்கை, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்துவது, சர்வதேச முதலாளித்துவத்திற்கு அடிபணிவது போன்றவையே இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு காரணம் என்றார். ஆட்சி மாறி னால் மட்டும் போதாது. இதை  எதிர்க்கும் ஒரு திராணியுள்ள ஆட்சி அமையவில்லை என்றால் இதே நிலைதான் நீடிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.  உலக வங்கியின் நிர்பந்தத்தின்படி ஆட்சி நடத் தியதின் விளைவே இலங்கை திவால் ஆனதற்கு காரணம். இலங்கை சந்தித்த அதே பிரச்சனைகளை இந்தியாவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை 25 விழுக்காடு தள்ளுபடி விலையில் வழங்கு வதால் இங்கு இன்னும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஓய்வூதியம் மீது தாக்குதல்

இந்தியாவில் உள்ள 55 கோடி தொழிலாளர்களிடமும், விவசாயிகளிடமும் கூடுதலான மறைமுக வரியை வசூலித்து அதானி, அம்பானி உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கு ஒன்றிய அரசு வாரி வழங்கிக்  கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது ஓய்வூதியம் மீது கை வைக்கத்  தொடங்கியுள்ளனர். இந்தியா வில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஏன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என  ஆட்சியாளர்கள் நினைக்கிறார் கள். அதனால்தான் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி, இறக்கும் வரை பணியில் இரு எனக் கூறுகிறார்கள். இதை எதிர்த்து பல நாடுகளில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது என்பது ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி. அரசு தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினால் அது செலவா? எனக் கேள்வி எழுப்பினார். 

ஒன்றுபட்டு போராடுவோம்

ரயில்வே, பாதுகாப்புத் துறை என அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாரிடம் வழங்கும் முயற்சி யில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுத்துறை தனி யார்மயமானால் பணி நிரந்த ரம், பணி பாதுகாப்பு, ஓய்வூதி யம், சமூக நீதியிலான இட  ஒதுக்கீடு, மருத்துவ வசதி  பறிக்கப்படும். எனவே பொதுத் துறை நிறுவனங்களை பாது காக்க, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிய, மாநில அரசு ஊழியர் கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஆலைத்  தொழிலாளர்கள், அமைப்பு சாரா, கட்டுமானம் என  அனைத்து தரப்பு தொழிலாளர் கலையும் திரட்டி போராடு வோம் என்றும் அ.சவுந்தரரா சன் கூறினார். பொதுச்செயலாளர் ஏ.முரு கேசன் வேலை அறிக்கை யையும், பொருளாளர் கே.பாபு  வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தேசிய பென்சனர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன், அகில இந்திய ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீதர், துணைத் தலைவர் அரிதாஸ், பொருளாளர் ராஜூ, டிஆர்இயூ பொதுச் செயலாளர் வி.அரிலால், இணை பொதுச்செயலாளர் அ.வெங்கட்ராமன், உதவித் தலைவர் பேபி ஷகிலா ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். ஏ.முருகேசன் நன்றி கூறினார்

தீர்மானங்கள்

தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் பஞ்சப்படி வழங்க வேண்டும், ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் வழங்கக் கூடாது, ரயில்வே ஓய்வூதியர்களுக்கான ஓய்வூ தியத்தை ஒன்றிய பட்ஜெட் டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு வின் அனைத்து பரிந்துரை களையும் அமல்படுத்த வேண்டும், முதியோருக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், ரயில்வே மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

செயல் தலைவர்களாக எஸ்.சாம்பசிவம், ராஜ்குமார், அசோகன், தலைவராக ஆர்.இளங்கோவன், பொதுச் செயலாளராக ஏ.முருகேசன், பொருளாளராக கே.பாபு உள்ளிட்ட 29 பேர் தேர்வு செய் யப்பட்டனர்.