tamilnadu

img

காவல்துறை மூலம் போராட்டங்களை தடுத்துவிட முடியாது

சென்னை, மார்ச் 9- காவல்துறை மூலம் நெருக்கடி அளித்து போராட்டங்களை தடுத்து விட முடியாது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமே போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று சென்னையில் நடைபெற்ற நில அளவர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். நில அளவர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், களப்ப ணியாளர்கள், வரைவாளர்கள், அமைச்சுப் பணியாளர்களை ஒருங்கி ணைக்கும் முன்மொழிவுகள் கைவிடப் படும் என்று எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரெ.காயம்பூ தலைமை தாங்கினார்.

போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் பேசியதாவது:  அரசுத் துறைகளில் தற்போது புதிது புதிதாக பல முறைகளை அமல்படுத்து கிறார்கள். அதில் முக்கியமானது கல்வித் தகுதியை அதிகப்படுத்துவது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, ஊதியம் வழங்குவது குறித்து அரசும், நிர்வாகமும் கவலைப்பட வில்லை. 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பையே தாண்டமுடியாமல் இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட் ட்டிருக்கும் பணிகளை ஒழித்துவிடக் கூடாது. இப்போது பணியில் இருப்ப வர்கள் இதே கல்வித் தகுதியோடு அனுப வத்தின் அடிப்படையில் பிற பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே கல்வித் தகுதியை மாற்றவேண்டிய அவசிய மில்லை என்பதையும்,

இது மென்மே லும் சமூக பிரச்சனைகளை அதிக ரிக்கும் என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் நில அளவைத்துறை இப்போது இருக்கும் நிலையிலேயே நீடிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. இந்த துறையை வேறு ஒரு துறையுடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. வருவா ய்த்துறைக்கு இங்கிருக்கும் பணிகளை ஏன் வழங்க வேண்டும். ஏன் கிராம நிர்வாக அதிகாரியை அளவைக்கு பயன்படுத்துகிறீர்கள். தற்போது நீதிமன் றத்தை நாடி தடை உத்தரவு பெற்றி ருக்கிறோம். அதனால் சர்வேயர் பணி தொடர்கிறது.

இல்லையென்றால் இந்த துறையில் பல குழப்பங்களை ஏற்படுத் தியிருப்பார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போக்குவரத்து, மின்சார வாரியம், ஆஷா பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டார். அதில் எல்லோரும் போராடிக் கொண்டி ருக்கிறீர்கள், நமது ஆட்சி வரப்போகிறது எல்லா பிரச்சனைகளையும் நான் தீர்த்து விடுகிறேன், இனிமேல் போராட வேண்டாம் என்று கூறியி ருந்தார். அரசு நியாயமான கோரிக்கை களை தானாகவே முன்வந்து நிறை வேற்றினால் ஏன் போராடப் போகி றோம். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலை யில் எந்த பிரச்சனைக்கும் இதுவரை தீர்வு காணவில்லை. காவல் துறையின் மூலம் நெருக்கடி அளித்து போராட்டத்தை தடுத்து விடலாம் என அரசு கருதினால், அது நடக்காது. கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலமாகத்தான், நியாயங் களை அங்கீகரிப்பதன் மூலம்தான் போராட்டம் இல்லாத தமிழகத்தை உரு வாக்க முடியும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நில அளவை ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டா போராடுகிறார்கள் இல்லை.  இந்த துறையை பிற துறை யுடன் இணைக்க மாட்டோம் என்று கூறுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஏற்கனவே நில அளவைத் துறை எப்படி செயல்பட்டதோ அதேபோல் செயல்படு த்துங்கள், காலிப் பணியிடங்களை நிரப்புங்கள், பணிச்சுமையை அதிகப் படுத்தாதீர்கள் என்பதுதான் கோரிக்கை. கடந்த ஆட்சியில் துணை முதல்வ ராக, நிதி அமைச்சராக இருந்த ஒ.பன்னீர் செல்வம் இப்போது அரசு ஊழியர் களின், போக்குவரத்து தொழிலா ளர்களின் பிரச்சனைகளை இந்த அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என அறிக்கை விடுகிறார். உங்கள் ஆட்சியில் நீங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டீ ர்களா எனக் கேட்டால், நாங்கள் தீர்க்க வில்லை. ஆனால் இப்போது உடனே நீங்கள் தீர்வு காணுங்கள் எனக் கூறுகிறார். எனவே அரசு உடனடியாக தொழிலாளர்களின் நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

இல்லையென்றால் தற்போது அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் வேறு வடிவில் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில பொதுச்செயலாளர் ெஜ.ராஜா, துணைத்தலைவர் அண்ணா குபேரன், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கணபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், தமிழ்நாடு வரு வாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.மங்கள பாண்டியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.பாரி, புல உதவி யாளர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொருளாளர் ஞா.ஸ்டான்லி நன்றி கூறினார். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.