தேனி ,பிப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஏ.ஏ. அப்துல் வஹாப்பின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னி ட்டு 50-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் குருதி கொடை வழங்கி சிறப்பித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர், மாநி லக்குழு உறுப்பினர், தீக்கதிர் பொது மேலாளர், கட்சியின் தேனி மாவட்டத் தலைவராக செயல்பட்ட தோழர் ஏ.அப்துல் வஹாப் 1.2.1924 ஆம் தேதி பிறந்தார். அன்னாரது நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்பத்தில் குருதிக் கொடை முகாம்நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் ஏரியா செய லாளர் கே.ஆர்.லெனின் தலைமை வகித்தார். ஏ.அப்துல் வஹாப் கட்சிக் கிளை செயலாளர் என்.இம்ரான் வர வேற்றார். சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் எச்.ஸ்ரீராமன், கே.அக்பர், கே.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை திமுக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் என்.ராம கிருஷ்ணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் குருதி கொடை முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், மதிமுக மாவட்டச் செய லாளர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், திமுக நகர செயலாளர்கள் எம்.சி.வீர பாண்டி, சி.பால்பாண்டி, விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப் பாளர் பி.மோகன், காங்கிரஸ் நிர்வாகி கவிஞர் பாரதன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பா.செந்தில் குமார், சிபிஐ நகர்செயலாளர் எம்.வி.கல்யாணசுந்தரம், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச்செயலாளர் அப்பாஸ் மந்திரி ஜமாத் கமிட்டி தலைவர் ஏ.ஜெய்னுலாவுதீன், ஏல விவ சாயிகள் சங்க துணைத் தலைவர் ஆர்.டி.ஜி.குமரன், அல்.ஆஜ்கர் பள்ளி தாளாளர் ஆர்.நைனார் முகமது, மருத்துவர் எஸ்.முருகன், வின்னர் ஸ்போர்ட்ஸ் ஏ.அலிம், ஆதி தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் கோட்டை முருகன், அப்துல்வஹாபின் மகன் யாகோப், பேரன் அபு உள்ளிட்ட தலைவர்கள் கட்சியின் ஏரியாக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் கள் திரளாக கலந்து கொண்டனர். பெரியகுளம் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் டி.பாரதி தலை மையிலான மருத்துவ குழுவினர் நிகழ்வில் கலந்து கொண்டு குருதி சேகரித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தானாக முன்வந்து குருதி கொடை வழங்கி சிறப்பித்தனர். நிறைவாக எம்.சுல்பிக்ராஜா நன்றி கூறினார்.