சென்னை, செப்.6- சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், வரும் அக்டோபரில் முழுக்க முழுக்க தமி ழின் அச்சு கலாச்சாரத்திற்காக அர்ப்பணி க்கப்படும் அருங்காட்சியகமாக திறக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் பண்டைய வரலாறு மற்றும் தமிழின் பொக்கிஷங் களை கொண்டு தரமாக உருவாக்கப் பட்டு வருகிறது. அச்சு உலகத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வளமான வர லாறு குறித்து அனைத்து நுண்ணறிவு தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. இந்தியாவிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட மொழி தமிழ் மொழிதான். இதற்குச் சான்றாக 1578ஆம் ஆண்டு தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் தம்பி ரான் வணக்கம் என்பதன் மூலம்அறியலாம். தமிழ் அச்சு கலாச்சார அருங்காட்சி யகத்தின் மூலம் வளமான இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாது காப்பதில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் அச்சிடப்பட்ட சொற்களின் மூலம் தமிழ் மொழியின் துடிப்புமிக்க பாரம்பரியத்தை ஆராய்ந்து ஒரு பயணத்தை தொடங்க அனைத்து வரலாற்று ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. தமிழ் இலக்கிய படைப்புகளை பாது காப்பதில் மூச்சாக இருந்தவர் கோட்டை யூர் சைன் போர்டு கலைஞர் ரோஜா முத்தையா செட்டியார். 1992ஆம் ஆண்டு ரோஜா முத்தையா மறைவிற்குப் பிறகு அவரது பொக்கிஷம்மிக்க உடை மைகள் குடும்பத்தினரால் சிகாகோ பல் கலைக்கழகத்திற்கு விற்கப்படுகின்றன. அதில் பழைய திரைப்பட பாடல் புத்த கங்கள், நாடக அறிவிப்புகள், அழைப்பி தழ் போன்றவற்றுடன் சுமார் 5,000 புத்தகங்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தரமணியில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் 400 ஆண்டு களுக்கும் மேலான தமிழ் மொழியின் அச்சு கலாச்சாரத்தின் அதிசயங்களை யும், 400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் வெளிவந்த செய்தித்தாள் கள் மற்றும் நூல்களையும் பார்வையா ளர்கள் இங்கு மட்டுமே காண முடியும். 400 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த நூல்களையும், செய்தித்தாள் களையும் காண எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.