தனுஷ்கோடி அரிச்சல்முனை என்பது நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்லும் ஒரு சுற்றுலா தலமாக இருந்து வரு கிறது. இதனை மையப்படுத்தி, இப்பகுதி யின் பாரம்பரிய மீனவர் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித் தொழில் பெருமளவில் நசிவுக்குள்ளா னதைத் தொடர்ந்து, தங்களின் வாழ்வா தாரத்திற்காக தனுஷ்கோடி - அரிச்சல் முனை செல்லும் வழியில் ஆங்காங்கே சிறுசிறு பெட்டிக்கடைகளையும் உண வகங்களையும் ஏற்படுத்திக் கொண்டு தொழில் செய்து பிழைத்து வருகின்ற னர். அரிச்சல் முனையில் இதே போன்று சில தொழிலாளிகள் சிறு ஆட்டோவில் ஐஸ்பெட்டிகளை இணைத்து அதில் இருந்து ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வருகின்றனர். இராமகிருஷ்ணாபுரம், நடராஜபுரம், சேராங்கோட்டை போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த இவர்கள் காலையில் தங்களின் ஐஸ் வண்டியுடன் அரிச்சல்முனை வருப வர்கள் மாலை 5 .30 மணியளவில் வீடு திரும்புவார்கள். இந்நிலையில் ஐஸ்கிரீம் விற்பனை யால் கடற்கரையின் தூய்மை பாதிக்கப் படுகிறது என்று அரசு நிர்வாகம் கூறியது. மாலை வீடு திரும்பும் பொழுது அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் வேலை யில் அந்த பகுதியின் இதர தொழிலாளி களோடு இவர்களும் சேர்ந்தே செயல்படுகின்றனர். அப்படியிருந்தும் இவர்களின் தொழிலுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் தினசரி பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு இதை விட நூறு மடங்கு கடைகள் உள்ளன. அதேபோல் கன்னியாகுமரி, மகாபலிபுரம் போன்ற பகுதிகளிலும் இதே போன்று ஏராளமாக கடைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம் உள்ளது. அங்கு தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்கள் அங்குள்ள வியாபாரிகள் அல்ல. மாநக ராட்சி மற்றும் நகராட்சிகளின் தூய்மைப் பணியாளர்கள் தான். ஆனால் அரிச்சல் முனையில் மட்டும் அந்த பணியை அங்கு தொழில் செய்பவர்களே செய்ய வேண்டும் என்று சொல்வது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை. இந்த பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காகவே வனத்துறை நிர்வாகம் தனியாக டோல்கேட் அமைத்து, இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ. 20 வீதம் தனியாக வசூல் செய்கின்றனர் என்பது தனிக்கதை. இதன் மூலம் நாளொன்று க்கு சராசரியாக ரூ. 20 ஆயிரம் வரை வசூல் நடைபெறுகிறது. இந்தப் பணம் தூய்மைப் பணிக்கு செலவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
எதற்காக இன்னொரு டோல் கேட்?
ஏற்கனவே இராமேஸ்வரத்திற்குள் நுழைவதற்கே ரூ.100 முதல் 150 வரை டோல்கேட் வசூல். அது போக தனியாக இந்த வசூல் எதற்கு . தனுஷ்கோடி என்பது தனித்த பகுதி அல்ல. அது இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக எல்கைக்குட்பட்ட பகுதிதான் . மீன்பிடி தொழில் நசிவடைவதை யொட்டி மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் என்ற பெயரில் மெழுகுவர்த்தி, சோப்பு, ஊறுகாய் தயாரிப்பு என மீன வர்களுக்கு எந்த வகையிலும் சம்மந்த மில்லாத தொழிலுக்கு பயிற்சியும், வங்கிக் கடனும் வழங்கும் அரசு நிர்வாகங்கள் அதற்கு விற்பனைக்கான சந்தையைக் கூட ஏற்படுத்தித் தராமல் மீனவர்களை கடன்காரர்களாக்கி வரு கிறது. தங்களுக்கான மாற்றுத் தொழிலை தங்கள் சொந்த முதலீட்டில் தொடங்கி செய்வதை முடக்கும் நட வடிக்கையை நிறுத்தி ஏழை மீன வர்களின் ஐஸ்கிரீம் விற்பனையை நிரந்தரமாக அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சிஐடியு முறை யீட்டை ஏற்று, தற்காலிகமாக கடைகளை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சி நிர்வா கம் கூறியுள்ளது. எனினும், அரசு ஆதர வுடன் , உதவியுடன் அரிச்சல்முனையில் ஏழை மீனவத் தொழிலாளர்கள் வாழ் வாதாரத் தொழில்களை நிரந்தரமாக அனுமதிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
எம். கருணாமூர்த்தி
மாவட்ட துணை செயலாளர்,
சிஐடியு, இராமநாதபுரம் மாவட்டம்