மக்களின் ஆணிவேரில் கை வைக்கும் ஒன்றிய பாஜக அரசு
சிங்காரவேல் - சூலூர் “ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கு 75,000 ரூபாய் மட்டுமே கிடைத்தால், தங்கத்தில் முதலீடு குறையும். அடமான நகையை மீட்ட பிறகு மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி யளிக்கிறது. திடீர் பணத் தேவைக் காகவே தங்கத்தை அடமானம் வைக்கிறோம். இந்த விதிகள் எங்களைப்போன்றவர்களை பெரிய அளிவிற்கு பாதிக்கும்” என்றார். அனுசுயா தேவி - இல்லத்தரசி “திடீர் தேவைக்காக நகையை அடமானம் வைக்கிறோம். தங்கத்தில் முதலீடு ஆபத்து காலத்தில் பயன் படுத்துவதற்காகவே. இந்த விதிகள் மற்றும் வட்டி, வரி குறைப்பு எளிய மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்,” என்றார். திஷா - இல்லத்தரசி “நகையை அதிக விலைக்கு வாங்குகிறோம். ஆனால், விற்கும் போது அல்லது அடமானம் வைக் கும்போது குறைவான பணம் கிடைத் தால், முதலீடு பயனற்றதாகிவிடும். புதிய தொழில், வீடு கட்டுதல் போன் றவற்றுக்கு நகைக் கடன் பயனுள் ளதாக உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்காவிட்டால், மீண்டும் கட னாளியாகும் நிலை ஏற்படும். நகையை மீட்ட பின்னரே மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என்ற விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார். சுகந்தி - இல்லத்தரசி அவசர தேவைக்காக மட்டுமே வீட் டில் உள்ள நகையை வங்கியில் வைத்து கடன் பெற்று வருகிறோம். இப்போது குறிப்பிட்ட மாதத்திற்குள் அடகு வைத்த நகையை திரும்ப எடுக்க வேண்டும் கூறுகின்றனர். பெரிய தொகையை உடனடியாக பெற முடியாது என்பவதற்காக நகையை ைத்து கடன் பெறுகிறோம். அப்படி இருக்க முழுமையாக பணத்தை செலுத்தி நகையை மீட்பது சிரமம். அதே போல நகையை திரும்ப எடுக்கும் அன்றைய தினமே கடன் பெற முடியாத சூழலை உருவாக்கியுள்ளனர். வழக்க மாக நகையை எடுத்து மீண்டும் அதனை அடகு வைத்து தான் பணம் பெற்று சமாளித்து வந்தோம். இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை. செந்தில்குமார் - தொழில் முனைவோர் சிறு, குறு தொழில் நிறுவனங் கள் பெரும்பாலும் நகைக்கடனை நம்பியே உள்ளோம். ஊழியர்கள் சம்பளம் கூட இப்படி தான் கொடுக் கிறோம். ஜாப் ஆடர்கள் எடுக்கும் போது எங்களுக்கு பணம் வர 3 மாதங்கள் வரை ஆகலாம் அதற்காக தான் ஒவ்வொரு முறையில் நகை கடனை பெறுகிறோம். ரிசர்வ் வங்கி யின் புதிய விதிகளால் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரியசாமி - விவசாயி ஒவ்வொரு முறையும் பயிர் சாகுபடிக்கு முன் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தே சாகுபடி செய்கிறோம். தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் நகை கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற் பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டில் உள்ள எங்களது முன்னோர்களின் நகைகளை வைக்கும் போது அதற்கு எந்த மாதிரியான ஆவணங்களை நாங்கள் காட்ட முடி யும்? மேலும் பேரிடர் போன்ற பிரச்சனைகளால் நஷ்டம் ஏற்படும் போது எப்படி எங்களால் அவர்கள் நிர்ண யித்த காலத்திற்குள் தொகையை செலுத்த முடியும். ஒரு வேளை கடனை செலுத்தி திரும்பப் பெறுவதாக இருந்தாலும் ஒரு நாள் கழித்து வைக்க முடியும் என்ற விதிகள் மிகவும் அபத்தமாக உள்ளது. சந்தோஷ் குமார் - தனியார் நிறுவன ஊழியர் கோவையில் நகைக் கடனை நம்பி பலர் தங்கள் அன்றாட செலவுகளைச் சமாளித்து வருகின்றனர். ஆனால், நகைகளின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்ற விதி எங்களைப் பெரிதும் பாதிக்கும். முழு மதிப்புக்கு கடன் கிடைக்காவிட்டால், அவசரத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது? இந்த விதிகள் சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். தனியார் வட்டிக்கு விடுபவர்களுக்கு இது வாய்ப்பாக அமையும். ஜீவிதா - இல்லத்தரசி தங்க நகைக் கடன் எங்களைப் போன்றவர்களுக்கு அவசரகால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக் கிய ஆதாரமாக இருந்து வந்தது. ஆனால், இந்த புதிய விதிகள் நகைகளை மீட்டு மறுநாள் மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் சிரமமானது. மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்றவற்றுக்கு உடனடியாக நிதி தேவைப் படுகிறது. ஒரு நாள் காத்திருப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. மேலும், பழைய நகைகளுக்கு ஆவணங் கள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இந்த விதி கள் தனியார் நிதி நிறுவனங்களுக்கு செல்ல வழி வகுக்கும். ஒன்றிய அரசு இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.