சி.ஸ்ரீராமுலு
420 ஆண்டுகளுக்கு முன்னர் நமது நாட்டில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலயர்கள் முதன் முதலில் தங்களுக்கு என்று எழுப்பியது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை. வரலாற்றுப் பாரம்பரியமிக்க இந்த கோட்டையிலுள்ள இரண்டு இடங்கள் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று கோட்டை அருங் காட்சியகம். மற்றொன்று, இங்கிலாந்துக்கு வெளியே ஆங்கிலேயர்கள் மரபுப் படி 1680 முதல் முதலாக கட்டப்பட்ட ‘ஆங்கிலிகன் சர்ச்’ என்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயமாகும். அப்போது, உலகின் ஒட்டுமொத்த பொருட் களின் உற்பத்தியில் கால் பகுதி இந்தியா வில் உற்பத்தியானதால் ‘தங்கப் பறவை’ என்று அழைக்கப்பட்டது. அதற்குக் காரணம், அன்றைக்கு ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஒருவர் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தார். அந்த நேரத்தில், விவசாயத்தையே தனது பொருளாதாரமாக கொண்டிருந்த பிரிட்டன், உள்நாட்டு போரால் தத்தளித்துக் கொண்டி ருந்தது. அன்றைக்கு ஆட்சி செய்தவர் முதலாம் எலிசபெத் ராணி. அப்போது, ஐரோப்பாவின் முக்கிய வல்லரசுகளாக இருந்த போர்ச்சுகீசும், ஸ்பெயினும் வர்த்தகத்தில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளின. இதையடுத்து 1600-களில் எலிசபெத் கையெழுத்திட்ட பிர கடனத்தின் படி கீழ் திசை நாடுகளில் வாணிபம் செய்ய உரிமை பெற்ற கிழக்கிந்திய கம்பெனி கள், 1612 ஆம் ஆண்டில் முதன் முதலாக சூரத் நகருக்குள் புகுந்தன. கோட்டை பரந்துபட்ட இந்தியாவின் அன்றைய தமிழகம், ஆந்திரம் போன்ற பகுதிகளில் உற்பத்தியான துணிகளுக்கு மேலை நாடுகளில் குறிப்பாக, ஐரோப்பாவில் மவுசு அதிகம். அதேபோல், அங்கிருந்து கொண்டு வந்த வாசனைப் பொருட்களை விற்பனை செய் ததில் கொள்ளை லாபமும் கிடைத்தது.
பின்னர், வணிகத்தை தென்னிந்தியா வில் விரிவுபடுத்த 1630-இல் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ‘கோல் கண்டா’ சுல்தானின் உதவியுடன் மசூலிப்பட்டணத் தில் காலூன்றினர். ருசி கண்ட பூனைகளுக்கு தென்னிந்தியா வில் நிரந்தரமான துறைமுக நகரை அமைப்ப தற்கு ஆங்கில வணிகர்களான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகிய இருவரும் வங்கக் கடலின் கடற்கரையோரம் ஒரு இடத்தை தேடி சென்னை வந்துள்ளனர். மதராஸ் பட்டணத்தில் ‘பொட்டல் காடான’ ஒரு இடத்தை தேர்வு செய்துள்ள னர். அது சென்னப்ப நாயக்கருக்கு சொந்தம் என்பதால் அவருடன் ஒப்பந்தம் செய்தனர். ஒரு கோட்டையை கட்டினர். அது தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இந்தியாவில் அந்நியர்கள் கட்டிய முதல் கோட்டை இதுவே. அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத இந்தியர்களின் விசுவாசம் ஆங்கி லேயருக்கு பெரும் பக்கபலமாக இருந்த தால் ராபர்ட் கிளைவ், மெக்கன்சி, மன்றோ, வாரன் ஹேஸ்டிங்ஸ், காரன் வாலிஸ் போன்றோர் இந்த கோட்டைக்குள் வசித்துக் கொண்டே நாட்டைப் பிடித்தனர். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையும் அதற்குள் இருந்த கட்டடங்க ளும் நாடு விடுதலைக்குப் பின்னர், 1948இல் ஜனவரி 31 தேசிய நினைவுச் சின்னமாக மாறியதைத் தொடர்ந்து, தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் அருங்காட்சியக மானது. வெள்ளையர்களிடமிருந்து பூரண சுதந்திரமடைந்த இந்தியாவில் இரண்டாவ தாக தொடங்கிய இந்த அருங்காட்சியகம் இம்மாதம் 31 அன்று ‘பவள விழா’ காண்கிறது.
காட்சிப் பொருட்கள்...
கோட்டையின் வலது பக்கம் பழங்கால பீரங்கிகளுடன் வரவேற்கும் இந்த அருங் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டி ருக்கும் 3000-க்கும் மேற்பட்ட தொல் பொருட்களும் அரிதானவையாகும். வரவேற்பு அறைக்குள் சென்றதும், சலவைக் கல்லில் மிகப்பெரிய சிலை ஒன்று 14.5 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. இது இந்தியாவில் தலைமை ஆளுநராக இருந்த வால்ஸ் பிரபுவின் உருவமாகும். மதராஸ் பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து 1800-களில் தாமஸ் பேங்க்ஸ் என்கிற சிற்பியால் செதுக்கப்பட்டதாகும். இதன் பீடத்தில் திப்பு சுல்தானின் இரு மகன்கள் பிணைக் கைதிகளாக சரண டையச் செய்த வரலாற்றை நினைவுபடுத்து கின்றனர். பிரெஞ்சு குடியரசின் அடையாளச் சின்ன மாகவும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் உருவமாக வும் போற்றப்படும் மரியனின் மார்பளவு சுண்ணாம்பு சிலையையும் காட்சிக்கு வைத்துள்ளனர். பிரிட்டிஷ் லிபரல் கட்சியின் தலைவர்க ளில் ஒருவரான எட்வின் சாமுவேல் மாண் டேகு, ஆங்கிலேய மன்னர்களில் டெல்லி அரியணையில் (தர்பார் )ஆட்சி செய்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரான பிரடெரிக் எர்னெஸ்ட், ஆங்கிலப் படை வீரரும் கன்சர் வேட்டிவ் கட்சியின் நிர்வாகியும் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்த ஆஷ்லி எர்ல்கைன் ஆகியோரது மார்பளவு பளிங்கு சிற்பங்களும் உள்ளன.
போர்க் கருவிகள்...
கிழக்கிந்தியக் கம்பெனிய ஆங்கிலே யர்களால் உபயோகப்படுத்தப்பட்ட போர்க் கருவிகள், கவச உடைகள், ஈட்டி, பட்டாக் கத்திகள், போர்க் கோடாரிகள், சிக்கி முக்கி யால் தீ மூட்டி இயக்கும் துப்பாக்கி என்று விதவிதமாக வைத்துள்ளனர். இவற்றுடன் இந்திய சிப்பாய்கள் 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய வேல், அம்பு, வாள் போன்ற ஆயுதங்களுடன் சட்டி பீரங்கிகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. படைக் கலன்களில் கண்ணாடிச் சட்டங்களுக்குள் சங்கிலிக் குண்டு, தெறி குண்டு என பல வகையான குண்டுகளுடன் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்களினின் மாதிரிகளும் உள்ளன. அதேபோல் முதல் உலகப்போரில் ஜெர்மனியர்களால் ‘எம்டன்’ என்ற கப்பலிலிருந்து சென்னை நகரின் மீது எறியப்பட்ட வெடிகுண்டின் சிதறிய ஒரு பகுதியும் இரண்டாம் உலகப் போரில் மெட்ராஸ் மீது எறியப்பட்ட குண்டின் மூடி பகுதியும் வைக்கப் பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பைனாகுலர் போல் உள்ள சிறு சிறு குண்டுகள் கொத்துக் கொத்தாக திராட்சைப் பழங்களை போல் காட்சியளிக் கின்றன. இதற்கு ‘கிரேப் ஷாட்’ என்றும் பெயரிட்டுள்ளனர். இதிலிருந்து எறியப்படும் குண்டுகள் ஒவ்வொன் றும் தனித்தனியாகச் சிதறி வெடித்து நாசகரமாக்கும் என்கிறது அங்குள்ள குறிப்பு. இவை அனைத்தையும் நிதான மாகப் பார்க்க வேண்டும். அப்போது தான், வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை எப்படி எல்லாம் அடிமைப் படுத்தினார்கள், அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற நடந்த விடுதலைப் போரில் இன்னுயிரைத் தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத் தழும்பு களை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
ரவி வர்மாவின் கைவண்ணம்...
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் கள் கேளிக்கைக்காக பயன்படுத்திய நீண்ட அறையில் இப்போது அரசர்கள், ராணிகள், ஆளுநர்கள், ஆர்க்காடு நவாபுகளின் உருவங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளதை பார்த்ததும் “இசை பாடும் ஒரு காவியம் இது ரவி வர்மாவின் ஓவியம்” என்ற திரைப்பட பாடல் வரிகள் தான் சற்றென்று நினை வுக்கு வந்தது. மூன்றாம் ஜார்ஜ் அவரது துணைவி யாருடன் முதன் முதலாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு வந்தது, இந்தியா வின் பேரரசியாக விக்டோரியா மகாராணி முடி சூட்டிய மகுடம், உடை களுடனும் வரிசை கட்டியிருக்கும் இங்குள்ள ஓவியங்கள் அனைத்தும் ஹைதர் தாமஸ் டே, ராஜா ரவிவர்மா போன்றோரின் கைவண்ணத்தில் எண்ணெய் வண்ணத்தில் தீட்டப்பட்ட தாகும். 146 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கி லம், பாரசீகம், தேவநாகரி எழுத்துக் களுடன் உருவம் பொறித்த ‘இந்தியப் பேரரசி’ விக்டோரியா மகாராணியின் தங்கப் பதக்கம். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் வீரம் மரணடைந்தவர்கள், வடமேற்கில் நடந்த போரின் நினைவாக வழங்கிய பதக்கங்கள், இந்திய மன்னர்கள் மற்றும் அதிகாரிகளை கவுரவிக்க வழங்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங் களும் வரிசை கட்டி நிற்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதி களில் பூமிக்கடியிலிருந்து பெறப்பட்ட தொல்பொருட்கள், சிலைகளின் புகைப்படங்கள், 315 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்திலிருந்த ‘துட்டு’, ‘டப்பு’ என்கிற வார்த்தைகள் அடங்கிய நாணயம். பகோடா முதல் பைசா வரை யிலான நாணயங்கள்.
மெட்ராஸ் மாகா ணத்தின் நாணயங்கள், இந்திய-போர்ச்சுகீசு, டச்சு, பிரெஞ்சு நாணயங் களும் அரிய தொகுப்பாகும். மதராஸ் மாகாண ஆளுநரின் மெய்க் காவல் படையில் குதிரைக்கு அணி வித்த துணி, பதவியேற்பு விழாக் களில் அணிந்த சீருடைகள், குல்லா, மேல் அங்கி, தலைப்பாகை ஆகியவை தனித்தனியாக கண்ணாடி பெட்டகத் தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் ஆங்கிலே யர்கள், ஆர்க்காடு நவாப்கள் பயன்படுத்திய பீங்கான் பொருட்கள் மற்றும் அரசு விழாக்களில் பயன் படுத்தப்பட்ட பீங்கான் கோப்பைகளும் உள்ளன. இவற்றில் நவாப்களின் பீங்கான்களில் பாரசீக மொழியும், கிழக்கிந்திய கம்பெனியின் பீங்கான் களில் சிங்க முத்திரையும் பளிச்சிடு கின்றன. குறிப்பாக ஆங்கிலேயர், பிரெஞ்சு, முகலாய சாம்ராஜ்யம் மற்றும் இஸ்லாமியர்கள் காலத்தின் தனித்துவமான கலைப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை படையில் பிரிட்டானிய கொடி, மன்னர்கள், ஆங்கிலேய ஆளு நர்கள் செய்து கொண்ட ஒப்பந்த கையெழுத்து பிரதிகள், 1800 களில் வரையப்பட்ட தமிழ்நாட்டின் முக்கிய இடங்கள், கோட்டையின் பரிமாணங் களில் எடுக்கப்பட்ட ஓவியங்களுடன் இந்த கோட்டை கட்டடங்களுக்கு கிழக் கிந்திய கம்பெனிகள் பயன்படுத்திய பெரிய இரும்பு பூட்டுகள், சாவிகள் என்று பலவும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. இத்துடன் வடிவமைத்துள்ள 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் புனித ஜார்ஜ் கோட்டையின் அரிய ஒளிப்பட தகடு, 1947 ஆகஸ்ட் 15 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் முதலாக ஏற்றப்பட்ட நமது மூவர்ண தேசியக் கொடியும் ஒரு கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஒரு கலை களஞ்சியத்தின் பொக்கிஷமாகும்.