tamilnadu

தனியார் கல்லூரியில் மயங்கி விழுந்த மாணவி

விழுப்புரம், ஜூலை.25- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே தனியார் கல்லூரி யின் முதல் மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்ததில் பலத்த காயத்து டன் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மணி நகரை சேர்ந்த வர் வெங்கடேசன் மகள் ரம்யா (18), விக்கிரவாண்டி தனியார் பார்மஸி  கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் இரண்டு முறை ஏற்கனவே மருத்துவ மனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்றார். இந்நிலையில்  காலை கல்லூ ரிக்கு வந்தவர் முதல்மாடியில் தனது வகுப்பு தோழிகளுடன் பால்கனி யில் நின்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.  உடன் அங்கிருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரி யர்கள், மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பிகள் அபிஷேக் குப்தா, பார்த்திபன் ஆகியோர் தலைமை யில் காவலர்கள் குவிக்கப்பட்டு கல்லூரிகள் முன்பு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.