ஒரு மாநிலம் நகராட்சி (முனிசிபா லிட்டி) நிலைக்குத் தரம் தாழ்த்தப் பட்டது. தற்போது ஜம்மு-காஷ்மீர் யூடி (யூனியன் பிரதேசம்) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு அவமானம் ஆகும்.
பணவீக்கத்தால் நாட்டில் காய்கறிகள், உணவுப் பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றின் விலை கள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளால் பண்டிகை களின் கொண்டாட்டம் கூட மங்கிவிட்டது. இனிமேலாவது பாஜகவை நம்புவது துரோகம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு மட்டுமே கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மோடி வாக்குறுதி தொடர்பாக அவதூறாக பேசி வருகிறார்.
தீபாவளி மற்றும் சாத் பூஜையின் போது பீகார் மற்றும் உ.பி.,க்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது ரயில்வேக்கு தெரியாதா? மும்பை பாந்த்ரா டெர்மினஸில் நெரிசல் காரணமாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. விடுமுறைக் கூட்டத்தைக் கையாள ரயில்வேக்கு தயாராக இருக்க தெரியவில்லை.