tamilnadu

img

அரசின் 4 ஆண்டுகள் எழுச்சிமிகு நிறைவு

அரசின் 4 ஆண்டுகள் எழுச்சிமிகு நிறைவு 

    போக்கிலேயே செல்லும் என்ற கவலை கள் உள்ளனவே … நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தா லும் இல்லாவிட்டாலும், கட்சி அமைப்பு  செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்திடும்.  மக்களை பாதிக்கிற பிரச்சனை ஏதேனும் இருந்தால், அவர்களுக்கு உதவிட கட்சி தலையீடு செய்யும்.  நாங்கள் மக்களோடு சேர்ந்து நிற்பதாலும், மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையோடு அவர்களது பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாலும் அவர்கள்  கட்சியுடனே நிற்கிறார்கள்.  

Hமுதலமைச்சர் என்ற அந்தஸ்து கட்சியை விட உயர்ந்ததாக இருப்ப தால் கட்சியால் அரசை சரி செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் உள்ளதே … கட்சியை விட மேலானவர்கள் யாரும் கிடையாது.  எங்களை நெறிப்படுத்து வதற்கான வழிமுறை கட்சியிடம் உள்ளது.  கட்சி விவாதங்களை நடத்தி, தேவைப்படுகிறபோது நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். Hபினராயிதான் கட்சி, கட்சிதான் பின ராயி என்று சொல்லப்படுகிறதே .. இவையெல்லாம் பொய்யான புனை வுகள் ஆகும்.  கட்சியின் தொண்டனாகவே நான் எப்போதும் இருந்துள்ளேன்.  கட்சி எனக்கு பணித்துள்ள கடமைகளையும், பொறுப்புகளையும் நான் நிறைவேற்றி வருகிறேன்.  Hபல ஆண்டுகள் கொடியேரி பால கிருஷ்ணன் உங்களது அரசியல் வாழ்வின் அங்கமாக இருந்தார் .. கொடியேரியின் இழப்பானது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பெரிய இழப்பாகும்.  நாங்கள் இருவரும் ஒரு சிறப்பான பிணைப்பை பகிர்ந்து கொண்டோம்.  மிகுந்த வேதனையாக இருந்தது.  ஆனால், இதுபோன்ற பிரச்ச னைகளை நாம் கடந்து முன்னேறி செல்லத்தான் வேண்டும்.  Hஇஸ்லாமிய சமூகத்தினரோடு உங்க ளுக்கு இயற்கையாகவே ஒரு இணைப்பு இருந்தது.  ஆனால் சமீப காலமாக, பாஜகவிற்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு புரிதல் இருப்பதாக சொல்லப்படுகிறது.  இதை எப்படி சமாளிக்க கட்சி திட்டமிட்டுள்ளது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில், இத்தகைய புனைவின் பின்னால் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு உள்ளது.  இஸ்லாமிய சமூகத்தினர் இவர்களது இந்தப் பொறியில் விழமாட்டார்கள்.

 இஸ்லாமியர்களிடையே சன்னி பிரிவினர் முக்கிய பிரிவாக உள்ளனர்.  மேலும், அவர்கள் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினரை ஏற்றுக் கொள்வதில்லை.  எப்போதெல்லாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி பலவீனமடைகிறதோ அல்லது பிரச்சனையில் சிக்கிக் கொள்கி றதோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு உதவிட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு தலையிடுகிறது.  துவக்கத்தில், இத்த கைய ஆதரவு ரகசியமானதாக இருந்தது. ஆனால் தற்போது இது வெளிப்படை யாகவே இருக்கிறது. இதற்கு முன்னர், காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக் அமைப்பும் அவர்களை எதிர்த்து வந்தன.  ஆனால் பின்னர் முதலில் ரகசியமாகவும், தற்போது வெளிப்படையாகவும் அவர்கள் சேர்ந்து செயல்படத் துவங்கி விட்டார்கள்.  ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு வலுவானதொரு அறிவுசார் மற்றும் ஸ்தாபன தொடர்பு உள்ளது.  மேலும், தவறான புனைவுகளை உருவாக்க அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கி றார்கள். இருப்பினும், இன்றைய சமூகம் மிகவும் விழிப்புடன் உள்ளது.  ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆதரிப்பதாக எங்கள் மீது பழி சுமத்துபவர்கள், கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வன்முறையில் மிக அதிகமான உயிர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இழந்தது என்பதையும், அது இன்றும் கூட தொடர்ந்து வருகிறது என்பதையும் நினை வில் கொள்ள வேண்டும்.  Hஆர்எஸ்எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் முதலாவது எதிரி யாக பினராயி விஜயன் இருப்பது வினோதமாக இருக்கிறதே …

நாங்கள் உண்மையிலேயே மதச்சார் பற்றவர்கள் என்பதால் தான் இவ்வாறு உள்ளது.  மதச்சார்பின்மையின் தூது வராக நீங்கள் மாறினால், அனைத்து வகுப்புவாத சக்திகளும் உங்களை எதிர்க்கும்.  Hஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டு அணிகளையும் கிறிஸ்துவ சமூகத்தினர் ஆதரித்து வந்தனர்.  தற்போது, அவர்களில் பலர் பாஜக பக்கம் சாய்மானம் கொண்டி ருக்கிறார்கள்.  இந்தப் போக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? கிறிஸ்துவ சமூகத்தின் சில பிரிவி னர்களை ஒரு வகுப்புவாத நிலைபாட்டை எடுக்கத் தூண்டுவதற்கு ஆர்எஸ்எஸ் தீவிர முயற்சியை மேற்கொண்டு வரு கிறது.  இதை நோக்கி ஒரு குறிப்பிட்ட அமைப்பு கூட செயல்பட்டு வருகிறது.  இத்த கைய பிரச்சாரங்கள் நன்கு ஆதரிக் கப்பட்டு, இவற்றுக்கு வலுவாக நிதிய ளிக்கப்படுகின்றன.  பெரும்பாலும் சுயநல நோக்கத்தின் உந்துதலால், ஒரு சில கிறிஸ்துவ தலைவர்கள் சில சமயங்க ளில் வகுப்புவாத சக்திகளுக்கு ஆதர வளித்துள்ளனர்.  என்ன நடக்கிறது என்ப தை கிறிஸ்துவ சமூகத்தினர் அறியவி ல்லை என்பதல்ல. ஆனால், இந்த அச்சுறுத்தலைப் பற்றிய ஆழமானதொரு புரிதல் தேவைப்படுகிறது.  இதில் உள்ள உண்மையான ஆபத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மதச்சார் பின்மை என்பது எந்த நிபந்தனையுமின்றி உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.  மேலும், எந்த வகையான வகுப்பு வாதமும் எதிர்க்கப்பட வேண்டும்.  சிறு பான்மையினர் நாடு முழுவதிலும் குறி வைக்கப்படுகின்றனர்.  சிறுபான்மை யினரும், மதச்சார்பின்மை சிந்தனை யைக் கொண்டுள்ள தனிநபர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணமிது.  

Hபாஜக 2016ல் கேரளத்தில் தனது முதலாவது சட்டமன்ற தொகுதி வெற்றியைப் பெற்றது.  நீங்கள் சபதமேற்றபடி, அதற்கடுத்த தேர்த லில் இந்த வெற்றிக்கு முடிவு கட்டப்பட்டது.  ஆனால், அதற்க டுத்து வந்த மக்களவைத் தேர்தல்க ளில் அவர்கள் மீண்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள் ளார்கள்.  கேரளாவில் பாஜகவின் வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?   ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்டை களில் ஒன்றாக கேரளா நீண்ட காலமாக இருந்து வருகிறது.  ஒவ்வொரு முறை கேரளாவில் பாஜக தனது கணக்கைத் துவக்கும் போது, சில தந்திரங்களை அவர்கள் பயன்படுத்தினர்.  காங்கிரஸ் கட்சியின் வாக்குகளில் ஏற்பட்ட சரிவு அவர்களது வெற்றிகளை உறுதி செய்தது. Hசுரேஷ் கோபியின் வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்க கட்சி தவறி விட்டதா? காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறியதன் காரணமாக சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.  இடது ஜனநாயக முன்னணி தனது வாக்குகளை இழக்க வில்லை.  ஆனால் காங்கிரஸ் கட்சி தனது வாக்குகளை இழந்தது.  மேலும், அந்த  வாக்குகள் முழுமையாக பாஜக வேட்பா ளருக்கு (சுரேஷ் கோபிக்கு) சென்றது.

 Hஇடது ஜனநாயக முன்னணியில் இணைந்திட ஐயுஎம்எல் தலைவர்கள் விரும்பியதாக பேச்சுக்கள் வந்தன.  எந்த சூழலிலும் ஐயுஎம்எல் அமைப் பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என இடது ஜனநாயக முன்னணி முடிவெடுத்ததா? அது அவர்களது ஒரு ஆசைதான்.  ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் தற்போது பிரதான கட்சியாக இருப்பது எது?  ஐயுஎம்எல்தான் அது.  எனவே, எந்த  தேவையற்ற ஆசையும் எங்களுக்கு இல்லை. Hஇரண்டு இடது ஜனநாயக முன் னணி அரசுகளிலும், உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக் கிறதே.. உள்துறை அமைச்சகம் நன்றாகச் செயல்பட்டு வருகிறது.  இந்த அரசின் ஆட்சிக் காலத்தில், கேரள காவல் துறை மிகவும் பொறுப்போடு நடந்து கொண்டது.  குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையோடு அவர்கள் செயல்படுவதை உறுதி செய்திட நிறைய சீர்திருத்தங்கள் செயல்படுத் தப்பட்டுள்ளன.  Hகாவல் துறைக்கு சுதந்திரம் கொடு த்தது தவறு என கட்சித் தலைவர்கள் சிலர் கருதுகின்றனரே … காவல் துறைக்கு சுதந்திரம் அளிக்கப் படவில்லை.  சரியான விஷயங்களை செய்வதற்கான சுதந்திரம் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது.  காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.  அது  நல்ல விஷயம் என்று நான் நம்புகிறேன்.  கட்சியும் அப்படித்தான் நினைக்கிறது.  எப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருக்கிற தோ அப்போதெல்லாம் கட்சிதான் காவல்துறையை இயக்குகிறது என்று முன்பு சொல்வார்கள்.  தற்போது, கட்சி அவ்வாறு செய்யவில்லை என்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் போலிருக்கிறது…. (சிரித்துக் கொண்டே) H முதலமைச்சராக நீங்கள் முதல் முறை பொறுப்பேற்றபோது, ஒவ்வொரு கோப்பிலும் ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை அதிகாரிகளுக்கு நினை வூட்டினீர்கள்.  உங்களது இந்த அறி வுறுத்தலை சரியானபடி எடுத்துக் கொண்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கோப்புகளின் நகர்வில் மிகப் பெரிய தொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.  எனினும், அதை மேம்படுத்திட நிறைய வாய்ப்பு கள் உள்ளன.  ஒரு திடீர் மாற்றத்தை  நாம் எதிர்பார்க்க இயலாது.  காலப் போக்கில் சில குணாம்சங்களும், அணுகுமுறைகளும் கைக்கொள்ளப் பட்டுள்ளன.  அவற்றை மாற்றிட கொஞ்சம் காலம் பிடிக்கும்.  இருப்பினும், ஒரு சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மேலும், கூடுதல் மாற்றங்களை எங்க ளால் செய்ய இயலும்.  Hஐஏஎஸ் அதிகாரிகள் இடையேயான சமீபத்திய வெளிப்படையான  மோதலை நீங்கள் எப்படி பார்க்கி றீர்கள்? அரசு இதை கவனமாகப் பார்க்கிறது.  மக்களின் முன்பு அரசின் குறியீடாக ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.  அதற்கேற்றவாறு அவர்கள் தங்களது கடமை களை நிறைவேற்றிட வேண்டும்.  பொருத்தமான நடவடிக்கையை அரசு எடுக்கவுள்ளது.

Hசமீபத்தில், இந்தியா கூட்டணி பலவீனமடைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலை வர் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியிருக்கிறாரே .. (புன்னகைத்தவாறு) துவக்கத்தி லிருந்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாங்கள், இந்தியா கூட்டணி யை ஒரு அணியாகப் பார்க்க வில்லை.  பாஜகவிற்கு எதிராக பொதுவானதொரு தளம் உரு வாக்கப்பட வேண்டும். மேலும், மாநிலச் சூழல்களின் அடிப்படை யில், அது முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது எங்களது கருத்தாகும்.  இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மிகப் பெரிய கட்சியாக இருப்பதாலும், அதன் பரந்த இருப்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.  ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் இது குறித்த தெளிவான புரிதலே இல்லை என்பதையே இதுவரையிலான அனுபவம் காட்டுகிறது.  பாஜகவிற்கு எதிரான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் ஒற்றுமையே தேவைப்படுகிறது.  ஆனால், காங்கிரஸ் கட்சி தனது சொந்த நிலைக்கும், நலன்களுக்குமே முக்கியத்துவம் தருகிறது.  Hஇந்தியா கூட்டணி தனது இணக்கத்தை இழந்து வருகிற போதும், ஒன்றிய அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் கூட்டு எதிர்ப்பு எழுந்து வருகிறதே … ஆம், தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக பொதுவான உணர்வு எழுந்து வருகிறது என்பது உண்மையாகும்.  

Hசசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்புக் குரல் உருவாகி வருகிறதே.. இது உங்களது கவனத் திற்கு வந்துள்ளதா? பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்த்திடலாம்.    H பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி இதர நாடுகளுக்கு எடுத்து ரைத்திட செல்லும் குழுவில் ஒருவ ராக தனது கட்சி உறுப்பினரை அனுப்பிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துக் கொண்டிருக்கிறதே … உலக நாடுகளின் முன் நமது நாட்டின் நிலைபாட்டை விவரித்திட ஒரு பிரதி நிதிகளின் குழு அனுப்பப்படும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதில் பங்கேற்கிறது.  Hஅமைச்சரவை மாற்றம் என்று சமீ பத்தில் செய்திகள் வெளியானதே … எது? ஒன்றிய அமைச்சரவையா? Hஇல்லை.. மாநில அமைச்சரவை .. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

Hஉங்களுக்குத் தோன்றும்போது மட்டுமே சிரிக்கிறீர்கள், நீங்கள் கோபமாக இருக்கும்போது அதை வெளிப்படுத்துகிறீர்கள் என்று உங்களைப் பற்றி கூறப்படுகிறது.  அரசியல்வாதிகளுக்குரிய ராஜ தந்திரப் பண்புகள் உங்களிடம் இல்லை.  உங்களது அரசியல் வாழ்வில் அது ஏதேனும் பிரச்ச னைகளை உருவாக்கியிருக்கிறதா? எப்படியோ, நான் இதுவரை வந்து சேர்ந்துவிட்டேன்…

H‘உடல் கழிவு’ என்று வெளியிட்ட கருத் தைப்போன்று, கடுமையான கருத்துக்களைச் சொல்லத் தயங் காத ஒருவர் நீங்கள்.  எதிர் வினைகள் பற்றி நீங்கள் யோசிக்க வில்லையா? சுயநலத்தோடு நீங்கள் அறிக்கை களை வெளியிடும்போது அல்லது செயல்களை செய்யும்போது மட்டுமே பின்னடைவுகள் ஏற்படும்.  மக்களுக்கு என்னைத் தெரியும்.  Hஉங்களது முந்தைய பதவிக் காலத்தின் இறுதியில், ரமேஷ் சென் னிதலா ஒரு நல்ல எதிர்க் கட்சித் தலைவர் என்றும், அவர் அந்தப் பதவியில் தொடர வேண் டும் என்றும் கூறினீர்கள்.  தற்போ தைய எதிர்கட்சித் தலைவர் பற்றி உங்களது கருத்து என்ன? தேர்தலுக்கு இன்னும் நேரமாக வில்லை.  நேரம் வரட்டும் (உரக்கச் சிரிக்கிறார்).

Hதேர்தல்கள் வரப்போகின்றன. இயல்பாகவே, பிரச்சாரத்தின்போது உங்கள் மகளுக்கு எதிரான எஸ்எப் ஐஓ வழக்கு முன்னுக்கு வருமே .. இந்த விஷயத்தில் எதுவும் இல்லை, எனவே எதுவும் நடக்காது.  இப்பிரச்ச னையை எழுப்புபவர்கள் பின்ன டைவை சந்திப்பார்கள்.  எங்க ளை அது பாதிக்காது.  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் எந்த விசாரணை அமைப்பும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.  ஒரு நிறுவனத்தை நடத்துவதில் எனது மகள் ஈடுபட்டி ருந்தது உண்மைதான். தான் அளித்த சேவைகளுக்கான கட்டணத்தை அந்த நிறுவனம் பெற்றுக் கொண்டது என்ப தும் உண்மைதான்.  பெறப்பட்ட தொகைக் கான வரியும் செலுத்தப் பட்டு விட்டது.  மற்றவை எல்லாம் இந்த விஷயங்களின் மீது புனையப்பட்ட கதைகள் ஆகும்.  இந்த கட்டுக் கதைகளின் பின் போகிறவர்கள் அது  குறித்து கனவு காணலாம், ஆனால் எதுவும் நடக்கப் போவதில்லை.  

Hகேரளத்தில் பின ராயியில் தொ டங்கிய கம்யூனிசம் பினராயிலேயே முடியும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகி றீர்கள்?    இவையெல்லாம் ஒரு சிலரது வெற்றுக் கனவுகளேயாகும்.  சில சமயங்களில், அவர்களால் இதை அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள இய லுவதில்லை.  எனவே, விஷ யங்களை மழுங்கடிக் கிறார்கள். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த பலவீனமும் இல்லை. எந்த பிரச்சனையுமின்றி அது முன்னே செல்லும்.