tamilnadu

img

சாபக் கேடாக நீடிக்கும் ஒரு ரயில்வே லெவல் கிராசிங்

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் நீண்ட நேரம் பொதுப் போக்குவரத்து  ஸ்தம்பிப்பது  நீடா மங்கலம்  ரயில்வே லெவல் கிராசிங்கில் (எல்.சி.20)-தான். தேசிய நெடுஞ்சாலை  எண் 67-இல் கும்பகோணம்-நாகை -வேளாங்கண்ணி-நாகூர்-தஞ்சை-மன்னார்குடி ஆகிய சுற்றுலா நகரங்களை   இணைக்கும் இந்த லெவல்  கிராசிங் டெல்டா மாவட்டங்களின் போக்கு வரத்தில்  சாபக்கேடாக    உள்ளது.

23 ரயில்களும், ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகளும்

நீடாமங்கலத்தில் இரண்டு    கிமீ சாலை தூரத்தில் மூன்று ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. ஒரு சதுர கிமீ   எல்லைக்குள் பாமணியாறு,  கோரை யாறு,  வெண்ணாறு  ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இவைகளைத் தாண்டி  இந்த ரயில்வே கேட்டிற்கு வரும்போதுதான் பிரச்சனை மேலும் விசுவரூபம் எடுக்கிறது. மன்னார்குடி  பாமணி மத்திய சேமிப்பு  கிடங்குகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்று மதி இறக்குமதி செய்யப்படும் ஆயி ரக்கணக்கான டன் தானிய  வாகனங் களும், நாகை, கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சை சாலைவழி பேருந்து போக்குவரத்தும்  இந்த ரயில்வே  கேட்  வழியாகவே செல்கின் றன.   நீடாமங்கலம் சந்திப்பில்  சரக்கு ஏற்றி இறக்கும் சரக்கு ரயில்கள்  எக்ஸ்பிரஸ்  மற்றும் பாசஞ்சர் வண்டி கள் எல்லாம் சேர்த்து சராசரியாக  நாளொன்றிற்கு  இருபத்தி மூன்று  ரயில் கள்   இந்த கேட்டை கடந்து செல்கின்றன.   கேட் மூடப்பட்டு  சரக்கு ரயில்  எஞ்சின்கள் ஷன்டிங் செய்யும் போது   ஒன்றரை முதல் 2  மணி நேரம் கூட  ஆகும்; மன்னார்குடி இணைப்பு செம்மொழி  போன்ற விரைவு ரயில்கள் தினசரி எஞ்சின்கள் கழற்றப்பட்டு தலைப்பு  மாற்றும் நேரமும் சராசரியாக முக்கால் மணி நேரம்  ஆகும். இந்த  சமயங்களில் எல்.சி.20- கேட்டின்  நாகை-கும்பகோணம்-மன்னார்குடி-தஞ்சை சாலையில்  ஒரு கிலோ  மீட்டர்  நீளத்திற்கு லாரி, பஸ்கள், இதர வாக னங்கள் பெரும்பாலான நேரங்களில் அணிவகுத்து நிற்கும்.  எல்.சி.20  கேட்  திறக்கும் போது நகரும் வாகனங்கள்   பல கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்கு வரத்தை திணறவைக்கும். கணக்கிடப் பட்ட 23 ரயில்களின் மூலம் சராசரியாக  ஒரு தடவை கேட் மூடப்பட்டு திறப்பதற்கு  சுமார் 20 நிமிடங்கள் ஆகும். குறைந்தது  சராசரி எட்டு மணி  நேரம்வரை  என்.எச். 67 சாலையின்  பொதுப் போக்குவரத்து  முடங்கிப் போகும்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி,  நகர செயலாளர் வி. தமிழ்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் டேவிட் பிரைஸ் ஆகியோர் கூறும்போது,  “இந்த ரயில்வே கேட்டோடு  நீண்டகால மாக  போராடிவருகிறோம்.   சாலை விபத்தில்  சிக்கிக் கொண்டவர்கள், பாம்புக்கடிக்குள்ளானவர்கள், பிரசவ வலியால் துடிக்கும்  கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை கயிற்றுக் கட்டில்களில் தூக்கிக்கொண்டு  கேட்டை கடந்ததை யும்;  தேர்வுநேர படபடப்பில்  ரயில்கள் வரும்போது கேட்கீப்பர்களின்  கட்டுப் பாட்டையும் மீறி மாணவர்கள் ரயில் பாதையை ஓடி கடக்க முயற்சித்த மயிர்கூச்செரியும் சம்பவங்களையும்; மாரடைப்பு நோயாளிகள் ரயில்வே கேட் அருகில் ஆம்புலன்ஸிலேயே காத்திருந்து இறந்த காட்சிகளை யெல்லாம்  நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்த கேட்டினால் நீடாமங்கலம் நகர, சுற்றுப்புற கிராமத்து மக்கள்  மட்டு மல்லாமல்; தொலைதூர சரக்கு போக்கு வரத்து வாகனங்கள்  பேருந்துகள் மற்ற மாநிலங்களில் இருந்து காரில்  சுற்றுலா வரும் பயணிகள் அனுபவிக்கும் துன்பங்கள் கணக்கிடலங்காதவை.  இந்த கேட் உருவாக்கும் மனிதவள உழைப்பு நேர (உழைப்பு நாட்கள்) விரயம் மற்றும் எரிபொருள்  விரயத்தை ஆய்வு செய்தால் மலைப்பூட்டும்  அள விற்கு இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.

பலவீனமான வையகளத்தூர் இணைப்பு பாலம்

ரயில்வே கேட்டிற்கு கிழக்கே  நாகை  சாலையில் இணையும்  வையகளத் தூர்-பழைய நீடாமங்கலம் இணைப்பு பாலம் அதிமுக மேல்மட்டத்திற்கு நெருக்கமானவரால் கட்டப்பட்டு சமீ பத்தில்தான்   பயன்பாட்டிற்கு வந்துள்ளது  பழைய நீடாமங்கலம் வழியாக   நாகை சாலையை இணைப்பதால்  லெவல் கிராசிங்கில்  நெரிசல் குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால்  பலத்த மழை,  பெருவெள்ளக் காலங்களில் வெண்ணா ற்றில் நீர் மட்டம் உயரும்போது அந்த  பாலத்தின்   தாங்கு  திறன்,   பாதுகாப்பு குறித்து பழைய நீடாமங்கலம் வைய களத்தூர்  பகுதியில் உள்ள  பலர்  அச்சம் தெரிவிக்கின்றனர்.  மேலும் பழைய நீடா மங்கலம்  சாலையின்  குறுகிய அகலம், வளைவுகள் உள்ளிட்ட பல காரணங் களால் கனரக  வாகனங்கள்  இப்பாலத்தை பயன்படுத்துவது கோர விபத்துகளை  ஏற்படுத்தக்கூடும்  எனவும்     கவலை தெரிவிக்கின்றனர். இதுபற்றி சிபிஎம் ஒன்றிய  செயலாளர் ஜான் கென்னடி,  5.10.2022 அன்று நீடாமங் கலம் வருவாய் வட்டாட்சியர் முன்னிலை யில் காவல்துறையினர்  நெடுஞ்சாலைத் துறை  அதிகாரிகள் கலந்துகொண்ட  ஒரு சமாதான பேச்சுவார்த்தையில், “இந்த பாலம் பலவீனமாக உள்ளது என்றும் அதில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற கோரி க்கை வைத்தோம்.  அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அது நடை பெறவில்லை என்று தெரிவிக்கிறார்.  

இடதுசாரிகளின் போராட்டங்கள்

1990-களில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை தீவிர மடைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  இதற்கு தீர்வுகாண அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்பட பல இயக்கங்களை  நடத்தி்ன. 2011-லிருந்து அதிமுகவின்  எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2012 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்   தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2013- 2014 நிதியாண்டில்   அப்போதைய  ரயில்வே நிலைக்குழு தலைவர் டிஆர்.பாலு இந்த திட்டத்திற்கு அனுமதியும் நிதியும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 29.10.2013 அன்று மேம்பாலம் கட்ட நிர்வாக அனுமதி அளித்து, துவக்க செலவிற்காக ரூ.10.67 கோடியையும்  தமிழக அரசு ஒதுக்கியது.  ஆனால் பணி கள் துவக்கப்படவில்லை. தீக்கதிர் உள்பட பெரும்பாலான  தமிழ், ஆங்கில  பத்திரிக்கைகள்  இதைப்பற்றி  ஏராள மான செய்திகளை வெளியிட்டிருந்தன. ரிட் மனுக்கள் மீது நீதிமன்றம் பிறப்பித்த  ஆணைகள் நிறைவேற்றப்படாததால்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்தது. 

குழப்பமான ரயில்வே மேம்பால பிளாஷ்பேக்

இதன் பிறகுதான் ரயில்வே துறை ஒரு எதிர் உறுதி வாக்குமூலம் (Counter Affidavit) ஆவணத்தை  சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில்,  “நீடாமங்கலம்  ரயில்வே நிலைய பகுதியில்  லெவல் கிராசிங் எண்.20-க்கு  பதிலாக நாகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH 67) கிமீ 52/4- இல்  தஞ்சாவூர் -  நீடாமங்கலம் ரயில் பாதையில் கிமீ 29/800-30/000 இடையே ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு ரயில்வே பணிகள் 2015-2016 திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேம்பால சீரமைப்பு மற்றும் பொது ஏற்பாட்டு வரை பணி (Alignment and General Arrangement Drawing)  மாநில நெடுஞ்சாலைத் துறையால் தயார் செய்யப்பட்டு  சீரமைப்பை இறுதி செய்வதற்கு முன் ரயில்வே துறையின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. இதற்கு   ரயில்வே துறையால் 12.03.2016 அன்று துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரயில்வே பகுதிக்குள் இருக்கும் பாலத்தின் பணியை மட்டுமே ரயில்வே துறையும்  எஞ்சிய   பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறையும் நிறைவேற்ற வேண்டும்.  பொது ஏற்பாட்டு வரைபணி யின்  ஒப்புதலுக்குப் பிறகு,  மேம்பா லத்தின்  ரயில்வே பகுதியின் கட்டுமான  செலவின மதிப்பீடு ரூ. 11,12,86,056/-க்கான 21.11.2016 தேதியிட்ட கட்டுமான ஏற்புக் கடிதத்தை கோப்கோ (COPCO) இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரயில்வே வழங்கியது.  இந்த சமயத்தில்தான் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தார்.  

கட்டுமானத்திற்கான அனுமதி  21.11.2016 அன்று  அளிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு பிறகு நெடுஞ் சாலைத்துறை  தலைமைப் பொறி யாளர் ரயில்வே துறைக்கு  12.05.2017 தேதியிட்ட ஒரு கடிதத்தை அனுப்பி யிருந்தார். அதில் அனுமதிக்கப்பட்ட சீரமைப்பில் சில அம்சங்கள்  போக்குவரத்து பிரச்சனைகளை உருவாக்கும் எனக்கூறி, ரயில்வே பகுதி கட்டுமானத்தின் திருத்தப்பட்ட சீரமைப்பு  முன்மொழிவைப் பெற்று  ரயில்வே நிறைவேற்றலாம்  என  அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. தாமதமான அக்கடிதத்தின் விளைவாக கோப்கோ (COPCO) இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.ஒப்பந்தத்தில் 21.09.2017 அன்று அல்லது அதற்கு முன் திட்டத்தை முடிக்க  காலக்கெடு இருந்தபோதிலும், கோப்கோ இன்ஜினியரிங் நிறுவனத்திடம்  கட்டுமானத்திற்கான இடம் அளிக்கப்பட வில்லை. பணியைத் தொடங்குவதற்குத் தேவையான அன்றைய அதிமுக அரசின்   அனுமதியும் கிடைக்கவில்லை.   ரயில்வே மேம்பாலத்திற்கான  நிலங்கள்    பழைய  நீடாமங்கலம் பரப்பன மேடு, சித்தமல்லி கிராமங்களில் இருந்தன. இவற்றை கையகப்படுத்தும் பணி இதனால் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் நிலைகுலைந்து தாமதமாயின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘கற்பகத் தருவாக காமதேனுவாக’ இருக்கும்  நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறைகளை அப்போதைய  முதல்வர்  எடப்பாடி  கே பழனிச்சாமி தனது பிடியில் வைத்திருந்தார்.  டெல்டா மாவட்டங்களின்  போக்குவரத்தில் மிக முக்கியமான இந்த பிரச்சனையில்   தனது  துறை அனுமதியை தாமதமின்றி ரயில்வேக்கு  அளிப்பதிலும்   கட்டு மானத்திற்கான இடத்தை கையகப் படுத்திக் கொடுப்பதிலும் எடப்பாடி  பழனிசாமி அறவே அக்கறை காட்ட வில்லை. 

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரயில்வே மேம்பாலப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக  கடந்த ஜுலை மாதம்  திருவாரூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்திடமிருந்து    கும்பகோணம்  மண்டல சிறப்பு மாவட்ட வருவாய்  அலு வலரிடம் நிலமெடுப்பு பணிகளை மாற்றி  ஒப்படைக்கப்பட்டது. நான்கு மாதங் களில் பல கிராமங்களில் நிலமெடுப்பு முடிந்து  நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுடன் கூடிய நிலத்தின் விலை பட்டுவாடா செய்யப்பட்டது. திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி கௌந்தர்யாவை நேரில் சந்தித்து கேட்டபோது, வெகுவிரையில் எஞ்சிய  நிலமெடுப்பு பணிகளும்  முடிக்கப்பட்டு விடும் என்று தீக்கதிரிடம்  ஆர்வமாக  கூறினார். இத்திட்ட நிறைவேற்றும் அதி காரியாக உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) தஞ்சை கோட்டபொறியாளர் முருகானந்தத்திடம்   கேட்டபோது நில மெடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  அதேபோல் திட்ட மதிப்பீட்டு பணி (Project Estimate)  விரைவில் முடிக்கப்பட்டு துறைத் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டுமான நிலம் கிடைத்தவுடன் தேசிய நெடுஞ் சாலை  எண்67-  ரயில்வே மேம்பாலத் தோடு  நேரிடையாக இணைவதால் எங்கள் துறையின் மற்றொரு பிரிவான தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் கட்டுமான பணிகள் நடைமுறை விதி களின்படி  துவங்கும்  என்றார். மிக நீண்ட காலமாக நீடிக்கும் நீடாமங்கலம் ரயில்வே லெவல் கிராசிங் பிரச்சனை, இப்போதேனும் முடியுமா என ஆவலோடு காத்திருக்கிறார்கள் மக்கள்.

- நீடாசுப்பையா