கலை இலக்கியம் மூலம் சொல்லும் எந்த கருத்தும் மக்க ளை எளிதில் சென்றடையும். பொது வுடமைக் கருத்துக்களை எளிதில் மக்களு க்கு புரியவைக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அப்பணியில் குறிப்பாக தமிழகத்தில் ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்திலும் அதன் மேடைகளிலும் பல கலைக் குழுக்கள் சிறப்பாக மக்களிடையே செயல்பட்டு கம்யூனிஸ்ட் கொள்கைகளை மிக எளிய முறையில் சொல்லி மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளன.
அப்படிப்பட்ட குழுக்களில் மதுரை குமார் கலைக்குழு, பாவலர் வரதராஜன் அவர்களின் கலைக்குழு, மதுரை மணவாளன் கலைக்குழு ஆகிய குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் ஜி.கே. என்றும் கல்யாணி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரை மணவாளன் கலைக்குழுவின் பங்கு மகத்தானதும் சிறப்பானதும் ஆகும். தோழர் கல்யாணி கால் நூற்றாண்டு காலம் கலைக்குழு மூலம் தமிழகம் முழுவதிலும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களிலும் பம்பாய் போன்ற பிற மாநிலங்களிலும் சிறப்பான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதைப் போன்றே கட்சிப்பணியிலும் முழுநேர ஊழியராக 25 ஆண்டுகாலம் சிறப்பாக செ யல்பட்டார். கால்நூற்றாண்டு அவர் நடத்திய கலை பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ‘கல்யாணி எனும் கம்யூனிஸ்ட் கலைஞனின் கால் நூற்றாண்டு கலைப்ப யணம்’ என்ற வாழ்க்கை தொகுப்பு நூலாக வெளி வந்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக செயல்பட்ட மறைந்த தோழர் ஜானகி காந்தன் அவர்களின் புதல்வரான எழுத்தாளர் கார்த்திகேயன் சிறப்பாகத் தொகுத்து எழுதி உள்ளார். தோழர்கள் ஜவகர், ச.தமிழ்ச்செல்வன், புத்தகத்திற்கு சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார்கள். இதை வாங்கி படிப்பதும் பாராட்டுவதும் வாழும் காலத்தில் அந்தக் கலைஞருக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்துவதாகும். இந்த நூலை சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதிப்பகத்துக்கு பாராட்டு.
- மோசஸ்
கல்யாணி எனும் கம்யூனிஸ்ட் கலைஞனின்
கால்நூற்றாண்டு கலைப்பயணம்
தொகுப்பாசிரியர் : ஜா.கார்த்திகேயன்
பதிப்பகத்தின் முகவரி
வெளியீடு : சுவடு பதிப்பகம், 7A - ரங்கநாதன் தெரு, சேலையூர் சென்னை - 600073
suvadueditor@gmail.com /www.suvadu.in
அலை பேசி : 9551065500 ,9791916936