தூத்துக்குடி, ஜூலை 14- தமிழ்நாடு விவசாயிகள் சங்க விளாத்தி குளம் தாலுகா மாநாடு விளாத்திகுளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தாலுகா தலைவர் பி.அர்ச்சுணப் பெருமாள் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் ஆர். ராகவன் பேசினார். வேலை அறிக்கையை தாலுகா செயலாளர் ஆர்.ராமலிங்கம் முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி பேசினார். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் பா. புவிராஜ் நிறைவுரை ஆற்றினார். தலைவராக ஆர்.ராமலிங்கம், செயலா ளராக ம.மலைக்கனி, பொருளாளராக ராமச் சந்திரன், துணைத் தலைவர்களாக பி.சேகர், செல்வி, துணை செயலாளர்களாக முத்து ராஜேஷ், ராம்ராஜ் உள்ளிட்ட 14 பேர் கொண்ட தாலுகா குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. 2020-21 ஆம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 2 ல் விளாத்தி குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டம் நடத்துவது , 2020 -21 ஆம் ஆண்டுக்கு மிளகாய் உள்ளிட்ட அனை த்து பயிர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.