பினராயி விஜயன் கேரள முதல்வர்
நவம்பர் 18ஆம் தேதி மஞ்சேஸ்வரத் தில் தொடங்கிய புதிய கேரள சந்தி ப்பும், அதில் பங்கேற்கும் அமைச்சரவையின் பயணமும் ஜனநாயகம் மற்றும் ஆட்சி வர லாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்று கூறியிருந்தோம். புதிய கேரள மக்கள் சந்திப்புகளின் கருத்தும் அதன் கீழ் உள்ள நடவடிக்கைகளும் தொடர்ச்சியான செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்பதும் தெளிவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது தானாகவோ தன்னிச்சையாகவோ செயல் படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. மக்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்ச னைகளை அறிவது ஆட்சிக்கு முக்கியம். மக்கள் தொடர்பான ஒவ்வொரு விச யத்தையும் கவனமாக ஆய்வு செய்து, நிர்வாகத் தலைமை தலையிட வேண்டும் என்பதே இந்த அரசின் உறுதியான நிலைப் பாடு. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை மேம்படுத்த வேண்டும். மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் கடலோரக் கூட்ட ங்களும், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வனத்துறை அமைச்சர் தலைமையில் வன நட்புறவுக் கூட்டங்களும் அப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு காணும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதைத்தொடர்ந்து தாலுகா அளவிலான குறை தீர்க்கும் கூட்டங்கள் (அதாலத்) அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. அவை மாவட்ட அளவில் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடுத்த கட்டமாக முழு அமைச்சரவையும் பங்கேற்ற நான்கு துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இவற்றில் அமைச்சர்கள் மட்டுமின்றி, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்று, ஒவ்வொரு பிரச்சனையையும் விரிவாக ஆய்வு செய்து முடிவெடுத்தனர்.
140 தொகுதிகளிலும்...
இந்த செயல்பாட்டின் அடுத்த கட்டமாக புதிய கேரளம் பார்வையாளர்களாக 140 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்று மக்களுடன் உரை யாடுவார்கள். முதல் இரண்டு நாட்களில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு செல்ல முடிந்தது. மஞ்சேஸ்வரத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திரளான பங்கேற்பு வரலாறு காணாதது. இரண்டாவது நாளான ஞாயி றன்று (நவ.19) முதல் நிகழ்ச்சி காசர்கோடு தொகுதியில் நடைபெற்றது. செங்கள பஞ்சாயத்து மினி ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம், அருகில் உள்ள சாலைகளில் வெள்ளம்போல் மக்கள் திரண்ட னர். இந்த நிகழ்ச்சிகளில் மஞ்சேஸ்வரம் மற்றும் காசர்கோடு தொகுதி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தங்களின் பிரச்சனைகளை அரசிடம் தெரி விக்க அமைக்கப்பட்ட கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியதுடன், புகார் மனுக்களையும் அளித்தனர். உதூமா தொகுதியில், புதிய கேரளம் சந்திப்பு சட்டஞ்சால் மற்றும் காஞ்ஞாங்காடு துர்கா அரசு பள்ளிகளில் நடந்தது. திருக்க ரிப்பூர் தொகுதியில் உள்ள காளிகடவு ஸ்டேடி யத்தில் பிரம்மாண்டமாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்து செல்லும் ஒவ்வொரு மையத்திலும் பங்கேற்பும் உற்சாகமும் அதிகரித்திருந்தது. திட்டமிட்டதைவிட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே காஞ்ஞா ங்காடு பள்ளி மைதானம் நிரம்பி வழிந்தது என்பது ஏற்பாட்டாளர்களின் அனுபவம். மஞ்சேஸ்வரத்தில் முதல் நாளில் 1908 மனுக்கள் மற்றும் புகார்கள் பெறப்பட்டன. அங்கு நிறுவப்பட்ட கவுண்டர்களின் எண்ணி க்கை போதுமானதாக இல்லை. இதை உணர்ந்து, அடுத்தடுத்த மையங்களில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.
காசர்கோடு கலந்துரையாடல்
ஞாயிறன்று (நவ.19) காலை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் காசர்கோடு ஓய்வு இல்லத்தில் காலை உணவுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் பகிர்ந்துகொள்ள பல்வேறு கருத்துக்கள் இருந்தன. மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விசயங்கள் கலந்துரையாடப்பட்டன. மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் காசர்கோடு மாவட்டத்தின் சுற்றுலாத் துறை ஒன்றாகும். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதி லளிக்கையில், அவற்றை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. எதிர்காலத்தில் எச்ஏஎல் கையகப்படுத்திய நிலத்தில் என்ன செய்யலாம் என்று காசர் கோடு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய அரசு உதவி செய்ய வேண்டும். அந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பிரச்சனை கள் மற்றும் மாநிலம் முழுவதையும் பாதிக்கும் பிரச்சனைகளை 25 பேர் முன்வைத்தனர். அவர்களிடம் கேட்டது மட்டுமல்ல, அந்தக் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டன. எழுதி வழங்கியவர்களும் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆய்வு மற்றும் பின்தொடர்தல் இருக்கும். நேரில் பேச முடியாதவர்கள் கருத்துகளை எழுதித் தர வாய்ப்பு உள்ளது. புதிய கேரளம் மக்கள் சந்திப்பில், பார்வையாளர்கள் அளித்த மனுக்களில் மதிப்புமிக்க ஆலோசனை களும் கருத்துகளும் உள்ளன. மக்களால் ஜனநாயக ரீதியாக முன்வைக்கப்படும் எந்தக் கருத்தும் பரிசீலனைக்கு உள்ளாகும் என்பது மட்டும் உறுதி.