tamilnadu

img

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுபகுதி

சென்னை, மே 6-  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்   காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக அப்பகுதிகளில் மே 8ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகக்கூடும். இது 9ம் தேதி காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக மே 8ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 9 மற்றும் 10ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகு திகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11ம் தேதி வரை தமிழகம், புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் அதிகபட்ச வெப்பநிலை படிப் படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உய ரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

7 மற்றும் 8ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 9ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறா வளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 70 கிலோ மீட்டர் வேகத் தில் வீசக்கூடும். 10 மற்றும் 11ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க க்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ  மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன வர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படு கின்றனர். ஆழ் கடலிலுள்ள மீன வர்கள் 8ம் தேதிக்குள் கரைக்கு திரும்பு மாறு அறிவுறுத்த படுகிறார்கள்.