விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
திருச்சி, மே 30 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சி பகுதியில், வெள்ளிவாடி கிராமத்தில் 47 வருடங்களாக பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும், ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய தொடர் போராட்ட முயற்சியாலும், வியாழனன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தின் விளைவாகவும், இரவோடு இரவாக அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு வந்து வீடு வீடாக பட்டாவை கொடுத்துவிட்டுச் சென்றனர். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் செங்கொடியின் பின்னால் திரண்டு நிற்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இது, நமது சங்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.