திருநெல்வேலி, அக்.28- நாங்குநேரியில் பட்டியலின மாண வர் சின்னதுரை, அவருடைய சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சாதி வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த இருவரும் கடந்த சில மாதங்களாக திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அவர்களைச் சந் தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவ ருடைய சகோதரி விருப்பப்படி அவர் கள் திருநெல்வேலி நகரில் உள்ள பள்ளிகளில் சோ்ந்து படிப்பை தொடர்வதற்கான சோ்க்கை ஆணை யை வழங்கினார். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒன்றையும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையையும் வழங்கி னார். மாணவரின் தாயார் சத்துணவு திட்டச் சமையல் உதவியாளர் ஆவார். அவருடைய விருப்பப்படி திருநெல் வேலி நகரிலேயே பணிபுரியும் வகை யில் பணி மாறுதல் ஆணையும் அமைச் சர் வழங்கினார்.