தூத்துக்குடி, ஜன.29- தூத்துக்குடி ஸ்டெர் லைட் எதிர்ப்பு போராட்டக் காரர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தில் சனிக் கிழமையன்று முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்திய மூர்த்தி ஆஜரானார். தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலி யாகினர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது 35 ஆவது கட்ட விசா ரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத் தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை போக்கு வரத்து பிரிவு ஐஜி கபில் குமார் சராட்கர், சென்னை காவலர் நலன் ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், சென்னை துணை ஆணை யர் மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்த னர். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது உளவுப்பிரிவு ஐஜி யாக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்தியமூர்த்தி ஆணை யம் முன்பு ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இத் துடன் 35 ஆவது கட்ட விசா ரணை சனிக்கிழமையன்று நிறைவுபெற்றது.