சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த மண்டலமாக மாறும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித் துள்ளார். மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நவ.29 அன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்த மான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.30 இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி களில் டிச.2- இல் புயலாக வலுப்பெறக் கூடும். ஆரஞ்சு எச்சரிக்கை! வட இலங்கை மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவ.30 அன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 1 முதல் 2 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படு கிறார்கள்” என்று பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.