தியாகத்தின் திருஉருவாய் உழைப்பில் மறுவடிவாய் திகழ்ந்த புகழ்மிகு தலைவர் கே.பி.ஜானகி யம்மாள் அவர்கள். 75 ஆண்டு வாழ்க் கையில் 60 ஆண்டு களுக்கு மேல் மக் கள் பணியில் ஈடு பட்டவர் அம்மா. 12 வயதில் நாட கத்துறையில் நுழைந்து குறு கிய காலத்தி லேயே புகழின் உச்சிக்கு சென்ற வர். அவரது பாட்டுத் திறத்தால் குரல் வளத்தில் தேசிய இயக்க மேடைகளில் பாடல்கள் பாடியதன் மூலம் அரசியல் அரங்கில் காலடி வைத்தவர். பொது வுடமை இயக்கத் தலைவர்கள் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராமமூர்த்தி போன்றவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர். எல்லா கம்யூனிஸ்ட்டுகளையும் போல காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிகளில் செயல்பட்டவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தவர். அதில் விவசாயி களை, பெண்களைத் திரட்டுவதில் முன் னின்றவர். விவசாயிகள் சங்கத் தலைவ ராக, மாதர் சங்கத் தலைவராக மிளிர்ந்த வர். மதுரை மாவட்டத்தில் அவரது கால டித் தடங்கள் படாத கிராமங்கள் மிகக் குறைவே. குத்தகை விவசாயிகளின் நில உரிமை பாதுகாப்பு, விவசாயத் தொழிலா ளர்களின் கூலி உயர்வு, கைத்தறி நெச வாளர்களில் வேலைநிலைமையில் மாற்றம், ஊதிய உயர்வு, பொதுமக்க ளின் அத்தியாவசியத் தேவைகளான உணவுப்பொருட்கள் பதுக்கலை எதிர்த்த போராட்டம் என அவரது பங்கேற்பும் போராட்டமும் பரந்து பட்டவை.
மெலிந்த தேகம், வலிய உள்ளம், அயரா உழைப்பு அதுவே அம்மா ஜானகி யின் அடையாளம். காங்கிரஸ் காரராக இருந்த போதே கட்சிக்காரர்களுக்கு அன்னமிட்ட அம்மா தன் கடைசி காலம் வரை தோழர்களுக்கும் தொடர்ந்து வந் தார். கலைத்துறையில் தான் சம்பாதித்த வீடு, நகை, பட்டுப்புடவைகள் அனைத் தையும் கட்சிக்காகவே செலவழித்தார். சொந்த வீட்டை விற்று விட்டு - “1, மண் டையனாசாரி சந்து” வீட்டுக்கு குடிவந்து அதுவே கட்சி அலுவலகமாகவும் ஆனது. அங்குதான் அவரது இறுதிமூச்சு வரை காலம் கழிந்தது. மதுரை நகரின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினராக துவங்கிய அவர், மதுரை நகராட்சி உறுப்பினராக, ஜில்லா போர்டு உறுப்பினராக, சட்ட மன்ற உறுப்பினராக செயல்பட்டு மக்கள் நலனை பாதுகாக்கப் பாடுபட்டார். இவை யெல்லாம் அவரது உழைப்புக்கு தன்ன லம் கருதா தொண்டுக்கு கிடைத்த அங்கீ காரம், இப்போது சிலர் சொல்வது போல, மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை. அதனால் கட்சித் தலைமை எங்கள் திற மைக்காக ஆளுநராக நியமிக்கிறது என்ற அலங்கோலமும் அதிகார வெறியும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலகாத தூரம்.
10, 12 வயதிலேயே வீட்டில் நூல் நூற்று, கதர்த் துணிகள் உடுத்துகிற பழக்கம் வந்தது. காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட போது கட்சியினரின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் அவருக்கு மதுரை நகரில் வரவேற்புக் கொடுத்தது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக - யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் செய்த தற்காக இரண்டுமுறை சிறை சென்றது. பிறகு மக்கள் பணிக்காக - கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக என 4 முறை சிறை சென்றது எல்லாம் அவரது அஞ்சா நெஞ்சத்திற்கு கிடைத்த ஆட்சியாளர் களின் “கொடைகள்”. முதல் சிறை வாசம் தந்த கொடிய ஆஸ்துமா அவரை அந்திமக் காலம் வரை அவஸ்தைக்குள் ளாக்கியது என்றாலும் அவரது பணியை அது எள்ளளவும் பாதிக்கவில்லை. நாடக மேடையில் ஜொலித்த அவர் அரசியல் அரங்கிலும் சுடர்விட்டார். அவ ரது யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்துக்காக மது ரையிலிருந்து அவரை நாடு கடத்துவது போல பிரிட்டிஷ் ஆட்சி திருச்சி பொன் மலையில் தங்கியிருக்கச் செய்தது. அங்கு தான் அவர் ஜான்சிராணி நாடகத்தை அவரே எழுதி இயக்கி இசையமைத்து குழந்தைகளைக் கொண்டு நடிக்க வைத்து பாலர் சங்கத்தையும் உருவாக்கி னார் என்று பாப்பா உமாநாத் கூறி யிருக்கிறார் என்று அம்மா ஜானகி நூலில் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். நாட்டு விடுதலைக்காகக் பாடு பட்டதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தர முன்வந்த பட்டயம், ஓய்வூதியத்தை மறுத்த அவர் கடைசி வரை கட்சி அலு வலகத்திலேயே குடியிருந்தார். எளிய வாழ்க்கை, மக்கள் மீது வற்றாத நேசம். அவர்களின் நல்வாழ்வுக்காக அர்ப்ப ணிக்கப்பட்ட தியாக உள்ளம். இவற்றால் அம்மா ஜானகி என்றென்றும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்திருப்பார்.
“உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார்
உள்ளத்தில் எல்லாம் உளன்”
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மக் கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்.
- ப.முருகன்