திண்டுக்கல் தொகுதி ரெட்டியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி சின்னம்மாள் மிகவும் பொறுப்போடு, ஊன்றுகோள் உதவியுடன் தள்ளாடி நடந்து வந்து வாக்களித்துவிட்டு திரும்பினார். தள்ளாத வயதிலும் வாக்களிக்க வருகை தந்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.