சென்னை,மார்ச் 2- புனையப்பட்ட வழக்கிலிருந்து இந்திய மாணவர் சங்கத்தின் தலை வர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர்தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகி யோர் வெளியிட்ட அறிக்கை வரு மாறு: மாணவர் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோ கன், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஜான்சி ராணி, ரேவதி, பல்கலைக்கழக நிர்வாகி மூக் கையா மற்றும் மாநில நிர்வாகிகள் மாரியப்பன்,புதுவை ரஞ்சித் ஆகி யோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது ஜே 1 சைதாப் பேட்டை காவல்துறை.
வழக்கின் பின்னணி
சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மற்றும் உடற்கல்வி பயிலும் மாண வர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அடிப்ப டைவசதி, கல்வி கட்டணம் ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போ ராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடை பெற்றது. இதில் கோபமுற்ற அன் றைய அதிமுக அரசின் காவல்துறை, போராட்டத்தை கலைக்க திடீரென உள்ளே புகுந்து, கண்மூடித்தனமாக தாக்கியது. போராட்டத்தை வழி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ( பெண் தோழர்கள் உள்ளிட்ட)மீது கண்மூடித்தனமான தாக்குதலையும் வசைவுகளையும் தொடுத்தது. தாக்குதலில் நிருபன் சக்கரவர்த்தி தன் சுயநினைவை இழந்த பிறகுதான் தாக்குதலை தவிர்த்தது காவல்துறை. இதற்கிடை யில் சிபிஎம் தோழர்கள் வரவே, சங்க நிர்வாகிகளை காவல் நிலையத்திலி ருந்து விடுவித்தது. இதன் பிறகு பொய்யாக ஜோடித்து மேற்கண்டோர் மீது வழக்கை பதிவு செய்தது.
பத்தாண்டு போராட்டம்
காவல்துறையினரால் வழக்குப் பதிவுக்குள்ளான சங்க நிர்வாகிகள் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்று வந்தனர்.வழக்கின் சம்மன் கள் அவரவர் கல்வி நிலையத்தில் வைத்து கொடுத்தது காவல்துறை (அச்சுறுத்துவதற்காக) . வழக்கு முறையாக சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் நடந்து வந்தது.அனை வரும் மாணவர்கள் என்கின்ற அக்க றைகூட இல்லாமல் நீதிமன்றம் வழக்கை நீடித்து கொண்டே வந்தது.(கல்லூரி நாட்களிலும் கூட வழக்கு விசாரணைக்கு வரும் ). சங்க நிர்வாகிகள் படித்து முடித்தும் கூட வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.அதில் ஆறுமுகம் முனைவர் பட்டம் கூட வாங்கிவிட்டார்.ஆனால் வழக்கு முடிந்தபாடில்லை. இதில் அடிக்கடி பிடிவாரண்ட் என்பதும் பிறப்பிக்கப் பட்டது.கடந்த இரண்டாண்டுகளாக பிணையில்லா வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பல வழக்கறிஞர்கள் கொண்டு இவ்வழக்கு நடத்தப்பட்டது. பல நீதிபதிகள் கூட மாறிவிட்டனர். நிறைவாக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தில் குவாஷ் (Quash) மனு செய்தார்.அத னடிப்படையில் 29-02-2024 அன்று வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். இவ்வழக்கிற்கு தேவையான நிதி உதவியை சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு செய்தது.
வழக்கு ஏன் போட வேண்டும்?
மாணவர்களை வழக்கை கொண் டும், காவல்துறை அடக்குமுறை கொண்டும் அடக்கிவிடலாம் என்ற பழி வாங்கல் எண்ணப் போக்கை தவிர வேறேன்ன இருந்துவிடப்போகிறது. ஆனால் அவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள் .இந்திய நாட்டில் அனைவருக்கும் சமமான அறிவியல் பூர்வமான கல்வியை உறுதிப்படுத்துவதை லட்சியமாகக் கொண்டவர்கள். எனவே இந்திய மாணவர் சங்கத்தை இந்த வழக்கை வைத்து தடுக்க முடியாது. அனைவருக்குமான சமமான கல்வியை உறுதிப்படுத்த போராட்டக் களத்தில் நின்ற மாணவர் சங்கத் தலைவர்களை பாராட்டுகிறோம்! இவ்வழக்கை மட்டுமல்ல, இந்திய மாணவர் சங்கத்தின் ஏனைய வழக்கு களை முடித்துக்கொடுத்து, எப்பொழு தும் உறுதுணையாக துணைநிற்கும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு மூர்த்தி அவர்களுக்கு நன்றி. பத்தாண்டுகளாக வழக்கின் செலவுக ளையும் வழக்கை முறையாகக் கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழுவிற்கு நன்றி. போராட்டங்களே சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது! போராட்டங்கள் தோற்றதில்லை! இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.