tamilnadu

img

பட்டுக்கோட்டை மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்

தஞ்சாவூர், ஜூன் 11 -  பட்டுக்கோட்டை தனியார் மருத்துவ மனையில், பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மயிலாடுதெருவைச் சேர்ந்த வர், பக்கிரிசாமி மனைவி சின்னப்பொண்ணு (வயது 56), கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சின்னப் பொண்ணு கூலிவேலை செய்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக சின்னப் பொண்ணுக்கு, வயிறு சிறிது சிறி தாக வீங்கிக் கொண்டு  வந்துள்ளது. போதிய படிப்பறிவு இல்லாததால் தனக்கு தொந்தி விழுவதாக நினைத்துக் கொண்டு அசிரத்தையாக இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மருத்துவ ஆலோசனை பெற வலியுறுத்தியும், கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக சின்னப் பொண் ணுக்கு லேசான வயிற்று வலி, மூச்சு விட முடியாத அளவு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உணவு உண்ண முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவ்வப்போது மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரிடம், அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று முறையாக ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து, பட்டுக்கோட்டையில் உள்ள, பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அன்பரசனை சந்தித்து ஆலோ சனை பெற்றுள்ளார். அப்போது, சின்னப் பொண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், வயிற்றில் பெரிய அளவிலான நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. 

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சின்னப்பொண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப் பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை மருத்துவர் அன்பரசன் தலைமையில், மகப்பேறு மருத்துவர் நிபுணர் மகேஸ்வரி, மயக்கவியல் மருத்துவர் ஹக்கீம் மற்றும் மருத்துவக் குழுவினர் சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி, சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வயிற்றில் இருந்த 9 கிலோ 730 கிராம் எடை யுள்ள நீர்க்கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். 

விழிப்புணர்வு இல்லாததே...

சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த, மருத்துவர் அன்பரசன் கூறுகையில், “ மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. அல்ட்ராசவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் என நவீன தொழில்நுட்பங்கள் வந்து 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் பொதுமக்க ளிடம் சரியான விழிப்புணர்வு இல்லை.  வயிறு வீக்கத்தை சாதாரண தொந்தி என நினைத்துக் கொண்டு,  கிராமப்புற பெண்ணான சின்னப்பொண்ணு உரிய சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். எங்களி டம் சிகிச்சைக்காக வந்த பிறகு, அவருக்கு சோதனை செய்ததில் வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வயிற்றில் இருந்த நீர்க்கட்டி வியா ழக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.  சாதாரணமாக தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஒரு குழந்தை 3 கிலோ எடை இருக்கும். இவர் 9 கிலோ 730 கிராம் எடை யுள்ள கட்டியை மூன்று மாத காலமாக சுமந்து  வந்துள்ளார். சாப்பிட முடியாமலும், மூச்சு திணறல், வயிற்று வலி உபாதையுடனும் வந்தவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  இந்த நீர்க்கட்டியுடன், குடல் வால்வு, கர்ப்பப்பை ஆகியவையும் முழுமை யாக அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் ஆரம்பத்தி லேயே மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். தற் போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் நலமுடன் உள்ளார்” என்று கூறினார்.