tamilnadu

img

டிஜிட்டல் வன்முறையால் 85 விழுக்காடு பெண்கள் பாதிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

டிஜிட்டல் வன்முறையால் 85 விழுக்காடு பெண்கள் பாதிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

சென்னை, செப்.6 - சமூக வலைதளத்தில் டிஜிட்டல் வன்முறையால் 85 விழுக்காடு பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளா தார புலனாய்வுப் பிரிவு என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், 85 விழுக்காடு சதவீதம் பெண்கள்  சமூக வலைதளம் உள்ளிட்ட ஆன்-லைன் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி கொரோனா  பெருந்தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான சைபர் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பெண்கள் மீதான ஆன்-லைன் துன்புறுத்தல், வெறுப்பூட்டும் பேச்சு, புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல், ஆன்-லைனில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங்களை அனுப்பு தல் உள்ளிட்டவை டிஜிட்டல் வன்முறையின் ஒரு பகுதி யாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில், குறிப்பாக பதின்ம வயது பெண்களே அதிகம் சிக்கி வருகின்றனர். இது அவர்களது மனநலனை வெகுவாக பாதிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் புகார் அளித்தால்,  சைபர் கிரைம் சட்டம் மூலம் அவர்களை டிஜிட்டல் வன்முறை யில் இருந்து பாதுகாக்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.